search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenage suicide"

    • சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
    • சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.

    இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    • ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார்.

    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே காவேரி பழைய பாலம், புது பாலம் என 2 பாலங்கள் உள்ளது.

    போக்குவரத்துக்கு முக்கிய இடம்

    இந்த வழியாகத்தான் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதேபோல் அங்கிருந்தும் ஈரோட்டுக்கு வருபவர்கள் இந்த பாலம் வழியாகத்தான் வருகின்றனர். இதனால் இந்த பாலம் போக்குவ ரத்துக்கு முக்கிய இடமாக உள்ளது.

    தற்போது காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளதால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியை சேர்ந்த நசரத், சாஜிதா தம்பதிகளின் மகன் ரியாஸ் வயது (19.) தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். நேராக காவிரி ஆற்று பழைய பாலத்தின் நடுவில் திடீரென வண்டியை நிறுத்தினார்.

    பின்னர் தனது நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பி ரமணியம் என்பவருக்கு தெரிவித்தனர்.

    தேடும் பணி தீவிரம்

    உடனடியாக அவர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். கருங்கல் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    ரியாஸ் குதித்த பகுதி மிகவும் ஆழமான பகுதியாகும். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்று மீனவர்கள் உதவியுடன் ரியாசை தேடி வருகின்ற னர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூடி விட்டதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ரியாஸ் பள்ளிபாளை யத்தில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கேரளா பதிவு எண்ணை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

    • தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார்.
    • இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால், தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

    ரமேசுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வானூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆபிரகாம் (வயது 24). மினி லாரி டிரைவர். இவரின் மனைவி புதுச்சேரியை சேர்ந்த ஜோதி என்கிற சிவஜோதி (20). இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலை யில் கணவன் மனைவி யிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்துள்ள தாக தெரிகிறது. நேற்றும் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தது இது குறித்து ஆரோவில் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . நேற்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இறந்து போனவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.

    • பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.
    • இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகு வதையும் தவிர்த்து வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகு வதையும் தவிர்த்து வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    கோவை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சம்பங்காளி. இவரது மகன் பிரதீப் (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகு வதையும் தவிர்த்து வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நண்பர் வீட்டில் தனியாக இருந்த போது சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

    பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் தற்கொலை செய்து கொண்ட பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    திருமணமான 1½ வருடத்தில் கல்பனா மொகந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குமார் ராவுத். மில் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா மொகந்தி (வயது 27). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 2 பேரும் கோவை சூலூர் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்பனா மொகந்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட கல்பனா மொகந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 1½ வருடத்தில் கல்பனா மொகந்தி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நெல்லை ஆர்.டி.ஓ. மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 50). துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்டார். இவர் பார்வதிராஜன்(26) என்ற மகன், பார்வதி(23) என்aற மகளுடன் வசித்து வந்தார்.

    இதில் பார்வதிக்கும் அவரது தாய்மாமன் மகன் அசோக்குக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இருவரும் சென்னையில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்நிலையில் கடந்த 2-ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பார்வதி மனமுடைந்து இருந்துள்ளார். இதையடுத்து வாழ்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

    மகள் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடியதை பார்த்த மாரியப்பன் மீதமிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடிய தந்தை-மகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பார்வதி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்வதிக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் இது குறித்து நெல்லை ஆர்.டி.ஓ.மைதிலி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×