search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"

    • மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
    • இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது29). இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.
    • மன வேதனை அடைந்த ராஜேஷ், சம்பவத்தன்று இரவு பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் (வயது 27) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். பின்னர் தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜேஷுக்கு கடன் கொடுத்த ஆன்லைன் நிதிநிறுவனம் மேலும் கடன் தொகை பாக்கி உள்ளதாக கூறி உள்ளது.

    மேலும் அவரது செல்போனில் இருந்த அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக ராஜேஷை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் சம்பவத்தன்று இரவு வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • செல்போனில் நண்பரிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் ஒருவரிடம் பேசிவிட்டு, தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
    • சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.

    இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    • மது பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் அருந்தி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது44). கூலித்தொழிலாளியான இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சேதுராஜா மனைவி மாரியம்மாள் (39). இவர் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சுப்பிரமணிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×