என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் கடன் செயலி"
- கடன் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- கடன் செயலி மூலமாக பாதிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகாா்கள் வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலிகளின் நிபந்தனைகளை படித்து பாா்க்காமல் கடன் வாங்கி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை பிரிவு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,திருப்பூா் மாவட்டத்தில் கடன் செயலி மூலமாக பாதிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகாா்கள் வருகின்றன.
இதில், எளிதாக கடன் கிடைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளைப் படித்துப் பாா்க்காமல் ஒப்புதல் அளித்து பொதுமக்கள் கடன் பெறுகின்றனா். ஆனால் குறிப்பிட்ட தேதி முடியும் முன்பாகவே கடன் திருப்பிச் செலுத்தக்கூறி தொந்தரவு செய்கின்றனா். அதேவேளையில் பணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் புகைப்படத்தை மார்பிங் செய்து அவா்களது கைப்பேசி பதிவில் உள்ள எண்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தக்கூடும். ஆகவே, கடன் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.
- மன வேதனை அடைந்த ராஜேஷ், சம்பவத்தன்று இரவு பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் (வயது 27) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். பின்னர் தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜேஷுக்கு கடன் கொடுத்த ஆன்லைன் நிதிநிறுவனம் மேலும் கடன் தொகை பாக்கி உள்ளதாக கூறி உள்ளது.
மேலும் அவரது செல்போனில் இருந்த அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக ராஜேஷை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் சம்பவத்தன்று இரவு வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






