search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் பலி
    X

    மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் பலி

    • அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சுப்பிரமணிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×