search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    திருமணமான 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை

    திருமணமான 1½ வருடத்தில் கல்பனா மொகந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குமார் ராவுத். மில் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா மொகந்தி (வயது 27). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 2 பேரும் கோவை சூலூர் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்பனா மொகந்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட கல்பனா மொகந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 1½ வருடத்தில் கல்பனா மொகந்தி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    Next Story
    ×