search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து மாற்றம்"

    • பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

    இந்த நிலையில் தீவுத்திடல் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடிவருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

    அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள், பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.

    மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளையில் இருந்து சோதனை முறையில் நடைமுறைக்கு வருகிறது.
    • வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, போக்குவரத்து மாற்றம் நாளையில் இருந்து சோதனை முறையில் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும்.

    முன்மொழியப்பட்ட திசைதிருப்பல்கள் பின்வருமாறு:

    சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் தொரைப்பாக்கம் சந்திப்பு -> 200 அடி ரேடியல் சாலை → ரேடியல் சாலை சுங்கச்சாவடியில் புதிய யு திருப்பம் ->பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் திருப்பம் → பெருங்குடி சுங்கச்சாவடி டைடல் பூங்காவை அடையும் வகையில் திருப்பி விடப்படுகிறது.

    காமாக்ஷி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

    இதேபோல், மாநகராட்சி சாலையில் இருந்து தொரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறமாக திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்னில் சென்று தொரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

    வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
    • கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இந்தப் பந்தயம் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிலையில், தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் பந்தய சுற்றுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 1-ந்தேதி வரை இரவு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கியின் சுரங்கப்பாதை, பாரிமுனை சென்று, அங்கிருந்து தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரையிலும், சுவாமி சிவானந்தா சாலையில் பெரியாா் சிலை முதல் நேப்பியா் பாலம் வரையிலும், காமராஜா் சாலையில் நேப்பியா் பாலம் முதல் போா் நினைவிடம் வரையிலும் சாலை குறுக்கலாக்கப்படும். இந்த வழியாக வாகனங்கள் வழக்கம்போல செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
    • சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட்' என்னும் கார் பந்தயம் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு பின்வரும் சாலைகள் பந்தயச் சுற்றுகளாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    எனவே, அதற்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் இன்று (17-ந்தேதி) இரவு முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    அதன்படி, போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை பாரிமுனை வழியாக செல்லலாம். அதேசமயம், முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    மேலும் அண்ணாசாலையில், பல்லவன் சாலை சந்திப்பு முதல் மண்ட்ரோ சிலை வரை, சுவாமி சிவானந்தா சாலையில், பெரியார் சிலை முதல் நேப்பியர் பாலம் வரை, காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் முதல் போர் நினைவிடம் வரை சாலைகள் குறுகலாக்கப்பட்டாலும் வாகனங்கள் வழக்கம்போல செல்லும். இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. கனரக வாகனங்கள் பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்படும். மேற்கண்ட தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும்.
    • பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து சென்ற வண்ணம் உள்ளது.

    இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, காமநாயக்கன்பாளையம் வழியாகவும், மங்கலம் வழியாகவும், செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகிறார்கள். மேலும் பல்லடம் நகரின் முக்கியமான பகுதிகளான பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
    • எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை

    மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிக மாக மாற்றம் செய்யப்படுகிறது.

    இன்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே கீழ மாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய சாலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும்.

    9-ந் தேதி அன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

    மேலும் பை-பாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலை, மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல் நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை-ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருந்துவமணை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் 10-ந்தேதி. காலை 7.10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.

    10, 11-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக் குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.

    அதே நாட்களில் பொது மக்களின் நலன் சுருதி நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங் கள் தவிர மற்ற வாகனங்க ளுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் இரு சக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

    அதே நாட்களில் பேலஸ் ரோடு, கீடிமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்கங்கள் நெரிசல் இல்லாமல் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல உதவும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகாசி

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளி வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவகாசி நகருக்குள் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பிற்பகலில் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நகர் பகுதிக்குள் கனரக வாக னங்கள் அனுமதிக்கப்படும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங் கள் தவிர மற்ற நேரங்களில் வெளியூரில் இருந்து லோடு ஏற்றவோ, இறக்கவோ, வரும் கனரக வாகனங்கள், உள்ளூரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    கனரக வாகனங்கள் பிள்ளைக்குழி நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக திரும்பி தெய்வானை நகர், மணிகண்டன் மருத்துவ மனை, மணி நகர் பஸ் நிறுத்தம் வழியாக சிவகாசி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் கனரக வாக னங்கள் சாட்சியாபுரம் சாமி யார் மடத்திலிருந்து கங்கா புரம், செங்கமல நாச்சியார் புரம், திருத்தங்கல் தேவர் சிலை, திருத்தங்கல் மாரி யம்மன் கோவில், திருத்தங் கல் செக்போஸ்ட் வழியாக சென்று திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமே வெம்பக்கோட்டை ஜங்ஷன் வழியாக பன்னீர் தெப்பம், மணிநகர், பஸ் நிலையம், அம்பலார் மடம் மற்றும் பழனியாண்டவர் தியேட்டர், காரனேஷன் ஜங்ஷன் வரையிலான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

    அனைத்து வாகனங்களை யும் மதியம் 3 மணிக்கு காரனே ஷனுக்கு எதிரே இந்து நாடார் பெண்கள் மேல்நி லைப்ப ள்ளிக்கு சொந்தமான மைதானத்திற் குள் சென்று நிறுத்த வேண்டும். பயணிகளை அங்கிருந்து மட்டுமே ஏற்ற வேண்டும். திருத்தங்கல் வழியாக வெளியே செல்ல வேண்டும். சிவகாசி நகருக்குள் வேறு எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க கூடாது. திருத் தங்கல் சாலையிலும் எங்கும் கனரக வாகனங்களை யோ, ஆம்னி பஸ்களையோ நிறுத்தக் கூடாது. திருத் தங்கல் புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே பயணிகள் மற்றும் பொருட் களை ஏற்ற, இறக்க வேண்டும்.

    • இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை அமலுக்கு வந்தது.
    • வாகனங்கள் போலீசார் அறிவித்துள்ள மாற்றுப்பாதையில் சென்றன.

    கோவை,

    சிங்காநல்லூர்- வெள்ளலூர் ரோடு நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் மோட்டார்சைக்கிள் மற்றும் இலகுரக வாகனங்கள், சிங்காநல்லூரில் இருந்து திருச்சி ரோட்டில், சாந்தி கியர்ஸ் சந்திப்பு, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக, நெசவாளர் காலனி, பட்டணம், நொய்யல் பாலம், எல் அண்ட் டி பைபாஸ் சென்று, வெள்ளலூர் செல்லலாம்.

    ஒண்டிப்புதூர் மேம்பாலம், மிராஜ் தியேட்டர் அருகில் 'யூ' டர்ன் செய்து பாலத்தின் சர்வீஸ் ரோடு, பட்டணம் நொய்யல் பாலத்தின் வழியாக, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோட்டில் வலப்புறம் திரும்பி வெள்ளலூர் செல்லலாம்.

    சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிபுரம் சோதனை சாவடி, தனியார் பள்ளி அருகே 'யூ' டர்ன் செய்து கோவை ரோட்டை அடைந்து, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோடு, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாகவும் வெள்ளலூர் செல்லலாம்.

    கனரக வாகனங்கள் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி ரோடு வழியாக சாந்திகியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிப்புரம் சோதனை சாவடி, இருகூர் பிரிவு, திருச்சி ரோடு, எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணிபுதூர் ரோட்டிலிருந்து வலப்புறம் திரும்பி சுங்கச்சாவடி வந்து, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாக வெள்ளலூர் செல்லலாம்.

    வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் இலகுரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கி லிருந்து வலப்புறம் திரும்பி பட்டணம் ரோடு வழியாக எல் அண்ட் டி புறவழிச் சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில் இடப்பக்கமாக ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் கனரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி எல் அண்ட் டி புறவழிச்சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில், இடப்பக்கமாக, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை அமலுக்கு வந்தது. வாகனங்கள் போலீசார் அறிவித்துள்ள மாற்றுப்பாதையில் சென்றன. போலீசார் ஏராளமானோர் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை
    • பாலக்காடு சாலையில் இருந்து வரும் பஸ்கள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.

    கோவை,

    உக்கடம்-ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லலாம். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்த வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டிவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.

    உக்கடம் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப ஆத்துப்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.

    பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலம் பாலக்காடு ரோடு மின்மயானம் அருகில் யு-டேர்ன் எடுத்து கரும்புக்கடை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    பொள்ளாச்சியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக குறிச்சி பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் வந்து உக்கடம் செல்லலாம் அல்லது ஆத்துப்பாலத்தில் இருந்து இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு காளவாய், புட்டுவிக்கி சாலை, சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடம் வந்த டைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். உக்கடத்திலிருந்து பாலக்காடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், உக்கடத்திலிருந்து குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை மார்க்கமாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    மாறாக பேரூர் புற வழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாறாக பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குனியமுத்தூரை அடுத்து சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டு விக்கி சாலை சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மேம்பால பணிகள் முடிவடையும் வரை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.
    • பட்டுல்லாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து சோதனை முயற்சி நடைபெற இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    * ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை- ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை- ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

    * பட்டுல்லாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை- பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணாசாலை- பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

    * ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * ராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * திரு.வி.க.- ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலை- பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே 'யுடர்ன்' வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைய அறிவுறுத்தல்
    • அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பலாம்

    கோவை,

    கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சந்திப்பு முதல் உப்பிலிபாளையம் சிக்னல் வரை மேம்பாலப் பணி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    அதன்படி, அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் நஞ்சப்பா சாலை வழியாக பார்க் கேட் ரவுண்டானாவை அடைந்து மத்திய சிறை அருகே செல்லும் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அல்லது உப்பிலிபாளையம் சிக்னலில் வலதுபுறம் திரும்பி ரெட்கிராஸ், ஹூசூர் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

    அண்ணா சிலை சந்திப்பில் இருந்து மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கே.ஜி. மருத்துவமனை ரெட்கிராஸ் வழியாக உப்பிலிபாளையம் சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அண்ணாசிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக செல்ல வேண்டும்.

    அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பியோ அல்லது லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாகச் செல்லலாம்.

    காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் பேருந்துகள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    காந்திபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் பார்க்கேட், எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைந்து செல்லலாம்.

    திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்,ஐ.சி. சிக்னல், பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×