search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    • இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,

    கருப்பட்டி - 175 கிராம்,

    முந்திரி - 30 கிராம்,

    திராட்சை - 30 கிராம்,

    பாதாம் - 20 கிராம்,

    பிஸ்தா - 20 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    தண்ணீர் - 200 மி.லி.,

    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,

    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் வந்தால் இதை செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு கப்,

    பால் - 3 கப்,

    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்பால் - ஒரு கப்.

    செய்முறை:

    பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

    பால் நன்றாக சுண்டியதும் ஆற வைக்கவும். (பால்கோவாவிற்கு முந்தைய பதம்)

    பால் நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

    சூப்பரான இளநீர் டிலைட் ரெடி.

    • சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று சாக்லேட் சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 4 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    * பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    * இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவியதும் எடுத்து விடவும்.

    * இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * இப்போது டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • குஜராத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டி தயிர் - 250 ml

    சர்க்கரை - 1/4 கப்

    பாதாம் மற்றும் முந்திரி தலா - 10

    உப்பு சேர்க்காத பிஸ்தா - 6-8 நம்பர்ஸ்

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் பூ - 2 இழைகள்.

    செய்முறை:

    இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.

    பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.

    பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.

    குறிப்புகள் :

    ஜாதிக்காய் பூ இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்.

    • இதில் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
    • வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது.

    தேவையான பொருட்கள்:

    பாதாம் - 100 கிராம்

    காய்ச்சிய பால் - ½ லிட்டர்

    சர்க்கரை - 6 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

    குங்குமப்பூ - 1 கிராம்

    நெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும்.

    சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.

    பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

    இப்போது பாதாம் ஷிரோ தயார்.

    அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

    • இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்

    பால் - 4 கப்

    முந்திரி - 20

    உலர் திராட்சை - 20

    ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும்.

    * இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.

    குறிப்பு:

    * பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.

    * பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    * பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.

    • இந்த பொங்கல் டயட்டில் இருப்பர்களும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    திணை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    கருப்பட்டி - 1 கப்

    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.

    * பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    * பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் திணையில்ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

    * பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

    * இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சூப்பரான திணை கருப்பட்டி பொங்கல் தயார்.

    • நாவல் பழத்தில் 'ஜாம்' செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    நாவல் பழம் - 1 கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    எலுமிச்சம் பழம் - பாதியளவு

    செய்முறை:

    நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். விதைகளை நீக்கி விடவும்.

    வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள நாவல் பழத்தை வாணலியில் கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும்.

    பிறகு சர்க்கரையை அதனுடன் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். துவர்ப்பாக இருப்பதாக தோன்றினால் சர்க்கரையை சிறிதளவு கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறிது நேரம் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    பின்பு பாதியளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    சிறிது நேரத்தில் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.

    அதனை ஆற வைத்து பயன்படுத்தலாம்.

    சூடு ஆறிய பிறகு ஜாமை ஒரு கண்ணாடி ஜாரில் பத்திரப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

    எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் 6 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் வைத்து பயன்படுத்த முடியும். ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

    • எள் உடல் எடையை குறைக்க உதவும்.
    • உடலில் கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - அரை கிலோ

    வெல்லம் -அரை கிலோ

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது.

    வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

    பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும்.

    பின்பு லட்டுகளாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சாக்லேட் புட்டிங் கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    • முழுவதும் பாலில் செய்யக்கூடிய இனிப்பு தான் 'பெங்காலி மிஷ்டி டோய்'.
    • இதை சாப்பிட்டால் முகத்தில் உண்டாகும் சுருக்கம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.

    தேவையான பொருட்கள்:

    புளிப்பில்லாத தயிர் - 50 மி.லி.

    கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.

    சர்க்கரை - 3 தேக்கரண்டி

    பால் - 400 மி.லி.

    குங்குமப்பூ - 1 கிராம்

    பிஸ்தா பருப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தயிரை வடிகட்டியில் ஊற்றி, அதில் இருக்கும் தண்ணீர் நீங்கும் வரை நன்றாக வடிகட்டவும். பின்னர் அதனை முட்டை அடிப்பானைக் கொண்டு கிரீம் பதத்தில் வரும் வரை கலக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் 300 மி.லி. பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சவும்.

    வாணலியில் சர்க்கரையைக் கொட்டி, பொன்னிறமாக உருகும் வரை கிளறவும். பின்பு அதில் 2 மேசைக் கரண்டி பால் ஊற்றி கலக்கவும். பால் சர்க்கரையுடன் கலந்து கிரீம் பதம் வரும்வரை கலக்கவும். இப்பொழுது 'பால் கேரமல்' தயார்.

    கன்டென்ஸ்டு மில்க் கலவையில், கேரமல் ஊற்றி கலந்துகொள்ளவும். பின்னர் அதில் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுள் ஸ்டாண்ட் வைக்கவும். தயிர் கலவை உள்ள பாத்திரத்தை அலுமினியம் பாயில் கவர் அல்லது மெல்லிய துணியால் மூடி ஸ்டாண்ட் மீது வைத்து வாணலியை மூடவும். கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதன் மீது பொடிதாக நறுக்கிய பிஸ்தா, குங்குமப்பூ தூவி அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது நாவில் கரையும் 'பெங்காலி மிஷ்டி டோய்' தயார்.

    ×