search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student dead"

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாகித்தியன். இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
    • மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம். விகாராபாத் மாவட்டம், புதூர் மண்டலம் கேசவரெட்டிபள்ளியில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கார்த்திக் (வயது 8) என்ற மாணவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கார்த்திக் வகுப்பு ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.

    இதில் மாணவர் கார்த்திக்குக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உடல் நலம் குன்றியது.

    இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகம் கார்த்திக் வகுப்பறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திகை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

    மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்குதான் மாணவன் உயிரிழந்தான் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவன் சாவுக்கு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே காரணம். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    • மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
    • சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன் (வயது13). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். அவரது கணவர் சுந்தரமூர்த்தியும் பிரிந்து சென்று விட்டதால் விசித்திரனை சீனிவாசன் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.

    விசித்திரன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது அந்த நோய்க்கான உபகரணங்கள் தற்போது ஆஸ்பத்திரியில் இல்லை என்றும், உபகரணங்கள் வந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசித்திரனை சீனிவாசன் கண்காணித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு பேச்சியின்றி விசித்திரன் கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விசித்திரனை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு விசித்திரன் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.

    இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.

    இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார்.
    • டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகள் மீனாசுந்தரி (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில். படித்து வந்தார்.

    தினமும் தனது கிராமத்தில் இருந்து அவர் காடவராயன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பின்னர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகவும் குறுகிய சாலையாக இருந்தததால் குறிப்பிட்ட தூரம் வரை டிராக்டரை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் அதனையும மீறி கனகராஜ் அந்த டிராக்டரை முந்த முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார். ஆனால் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். இதைப்பார்த்த அவரது அண்ணன் கனகராஜ் கதறி அழுதார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி மீனாசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவி பலியானதையடுத்து முதுகுளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
    • வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் மாதையன், மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு திவாகர் (13), ஜீவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    திவாகர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் இவர் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வந்தார்.

    வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.

    வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார். வேன் கோனேரிபட்டி பேரேஜ் கதவணை மின்நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

    அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீண்ட நேரமாகியும் மாடிக்கு சென்ற மகன் வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர்.
    • சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தான். அவன் அருகே சொல்யூஷன் டியூப் இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுராலு அருகே உள்ள சீனிவாசபட்டி காலனியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுவன் வாகனங்களின் டியூப்களுக்கு பஞ்சர் போடும் சொல்யூஷனை துணிகளில் வைத்து முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தான்.

    சொல்யூஷனை முகர்ந்து பார்ப்பதால் ஏற்படும் ஒரு வித போதைக்கு சிறுவன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது பெற்றோர் பலமுறை அடித்து பார்த்தும், கண்டித்தும் சிறுவனால் அந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்த சிறுவன் மாடிக்கு சென்றான். நீண்ட நேரமாகியும் மாடிக்கு சென்ற மகன் வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தான். அவன் அருகே சொல்யூஷன் டியூப் இருந்தது.

    சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் மரணம் குறித்து டாக்டர்கள் கூறுகையில்:-

    பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சொல்யூஷன், ஒயிட்னர் போன்ற சிறு போதை தரும் பொருட்கள் சிறுவர்களுக்கு தாராளமாக கிடைத்து விடுகிறது. ஒருவருக்கு இருக்கும் பழக்கம் அவருடன் பழகும் மற்ற சிறுவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

    இது போன்ற பழக்கத்திற்கு ஆளாகும் சிறுவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.

    போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவர்களை மீட்பது சிரமம். எனவே சிறுவர்களை அவர்களது பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் ஆர்யா தொங்கியபடி பயணம் செய்தான்.
    • மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென ஆர்யா தவறி கீழே விழுந்தான்.

    வேளச்சேரி:

    பெரும்பாக்கம், கலைஞர் நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ஆர்யா(வயது14). மேடவாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான்.

    இவன் கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் (எண்99) தொங்கியபடி பயணம் செய்தான். மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென அவன் தவறி கீழே விழுந்தான். இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் ஆர்யா பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ஆர்யா பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

    போரூர்:

    மதுரவாயல் வேல்நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது பூஜாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மகளுக்கு டெங்கு காய்ச்சலா? பன்றி காய்ச்சலா ? அல்லது எச்1 என் 1 ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா? என எந்தவிதமான உரிய விளக்கமும் டாக்டர்கள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மண்டல சுகாதார அதிகாரி பிரபாகரன் கூறும்போது:-

    சிறுமியின் மருத்துவ அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதன் பின்னரே சிறுமி இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் மேலும் 144-வது வார்டுக்கு உட்பட்ட அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது, மற்றும் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (வயது 24).

    விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் நித்யா டிக்கரிங் வெல்டிங் வெர்க்ஸ் எனும் பெயரில் சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இவருடைய ஒர்க்‌ஷாப்பில், பகுதி நேர பணியாளராக பணிபுரிந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி (15). என்ற 9-ம் வகுப்பு பயின்று வந்த சிறுவன், வழக்கம்போல இன்றும் தனது வேலையை முடித்துவிட்டு இரவில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

    இதனைக் கண்ட கடையின் உரிமையாளர் பால்ராஜ் குருமூர்த்தியை காப்பாற்ற மின் ஒயரை இழுத்தார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் கையில் ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் மின்சார விபத்து குறித்து வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா, செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 10).

    இந்த குழந்தை, ஆயில்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தது. வழக்கம்போல் இன்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள நிழற் கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தான். மேலும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி அங்கு நின்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக தனியார் கல்லூரி பஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அதே நேரத்தில் எதிரே லாரி ஒன்றும் வேகமாக வந்தது. அப்போது திடீரென கல்லூரி பஸ்சும், லாரியும் செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் கல்லூரி பஸ் நிலைதடுமாறி பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிழற் கூடத்தில் மின்னல் வேகத்தில் புகுந்தது. அந்த பஸ் நிற்காமல் சென்று மாணவர்கள் மீது மோதியது. இதில் நிழற்கூடத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி உட்கார்ந்திருந்த பிரபாகரன் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியது. இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான்.

    இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆயில்பட்டி போலீசார், அங்கு விரைந்து வந்து மாணவன் பிரபாகரன் உடலை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும்.
    • பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    தாம்பரம்:

    நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொழிச்சலூர் அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ்மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    தாம்பரம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ(வயது17). சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடந்த விழாவில் லட்சுமி ஸ்ரீ பங்கேற்க சைக்கிளில் வந்தார். அவர் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

    விழா முடிந்ததும் காலை 11 மணியளவில் மாணவி லட்சுமி ஸ்ரீ வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார்.

    அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்(எண்52எச்) திடீரென முன்னால் சென்ற மாணவி லட்சுமிஸ்ரீயின் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய லட்சுமிஸ்ரீ சைக்கிளோடு கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ்மோதி மாணவி பலியானது பற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்தில் மாணவி பலியாகி விட்டதாக குற்றம் சாட்டினர்.

    போலீசாரின் சமாதான பேச்சுவார்தைக்கு பின்னர் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பலியான மாணவி லட்சுமிஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுதந்திரதின விழா முடிந்ததும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது பள்ளி தோழியான மற்றொரு மாணவியுடன் தனித்தனியாக சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரத்தில் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    பல்வேறு ஆசை, எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவியின் வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து போனது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

    மாணவி லட்சுமிஸ்ரீ பலியானது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியான சம்பவம் அவருடன் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக மாணவிகள் மற்றும் பள்ளி தோழிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×