search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குதல்"

    • மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

    அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.

    இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.

    மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
    • சிறுமி சுபிக்‌ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இவர்களது குழந்தைகள் தருண்(வயது 12 ), நித்திஷ்(8), சுபிக்ஷா(6). ரங்கசாமியும், பார்வதியும் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

    சுபிக்ஷா 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக வாட்டர்ஹூட்டரை பக்கெட்டில் வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளனர்.

    தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். இந்நிலையில் சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் சுபிக்ஷா குளியலறையிலேயே மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    சோதனை செய்த மருத்துவர் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலை குளித்தலை காவல் நிலையத்திற்கு தெரிவித்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர்.
    • கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.

    பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

    கடலூர்:

    மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவை சேர்ந்த ராஜா (வயது 46), கொத்தனார். இவர் இவருடன் கள்ளக் குறிச்சி மாவட்டம், சிறு வத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் (47), கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள் (30) ஆகிய 3 பேர் கொத்தனார் மற்றும் சித்தாள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் விருத்தாச லத்தை அடுத்த மங்கலம் பேட்டை ஷேக்நகரில் கட்டிட வேலை செய்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனைக் பார்த்த வீரம்மாள் ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த ராஜாவும், உடனே ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, ராஜா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அலறியடித்துக்கொண்டு, ராஜா கீழே விழுந்தார். அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்தவர்கள், வீட்டில் உள்ள மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, ராஜாவை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இறந்து போன ராஜாவுக்கு ராஜகுமாரி என்ற மனை வியும், ஜனனி (19), பவதாரணி (16) என்கிற 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது.
    • டாக்டர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. பின்னர் அங்கு உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் அங்குள்ள விளைநிலங்களை நோக்கி சென்றது. அப்போது காட்டு யானை திடீரென தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.

    மேலும் அங்குள்ள மரம் ஒன்றையும் இழுத்து சாய்க்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியின் மீது விழுந்தது.

    இதில் யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது. இதில் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது.

    இன்று அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மாவட்ட வனஅதிகாரி கவுதமன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை. யானை இன்று அதிகாலை இரைதேடி ஊருக்குள் புகுந்ததும், அப்போது மரம் ஒன்றை சாய்த்தபோது, மின்சாரம் தாக்கி பலியானது தெரிய வந்தது.

    தொடர்ந்து அங்கு கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையில் மின்சாரம் தாக்கியதில் ஆண் காட்டு யானை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற கபாலி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் புறாக்களை வளர்த்து வருகிறார்.

    இவரது வீட்டையொட்டி பொன்னுசாமி வீதி உள்ளது. இதன் அருகே மின் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வளர்க்கும் புறா ஒன்று பொன்னுசாமி வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்து இருந்தது. எங்கே மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என்ற பயத்தில் புறாவை காப்பாற்ற சதீஷ் முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தையடுத்து கடந்த 30-ம் தேதி பொன்னுசாமி வீதியில் பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடித்து வருதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது.
    • மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.

    இதனால் கீழே விழுந்த குரங்கிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாயில் தனது வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளையும் வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார். இதனையடுத்து குரங்கு உயிர் பிழைத்து அங்கிருந்து சென்றது.

    மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் பெருமாள் வேலை பார்த்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). இவர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பெருமாள், வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அவர் கோவிலில் பணிகளை செய்து கொண்டிருந்த மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. மேகங்கள் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    கோவிலுக்குள்ளும் வெளிச்சம் இல்லாததால், பெருமாள் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பெருமாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெருமாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    மழையின் காரணமாக சுவிட்ச் போர்டு இருந்த கோவில் சுவற்றில் நீர் கசிந்து இருந்ததும் அது தெரியாமல் பெருமாள் சுவிட்ச் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பெருமாளுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    • இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது.
    • உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் பால் (வயது60). விவசாயி. இவரது பேரன் இசக்கிமுத்து.

    இந்நிலையில் இன்று காலை பால் தனது பேரன் இசக்கிமுத்துவுடன் உவரி அருகே உள்ள தோட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர். அவர்கள் இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. அதில் மாடுகள் சிக்கியதால் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனால் 2 மாடுகளும் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பால் மற்றும் இசக்கிமுத்துவிற்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார்.
    • சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கிராமசாவடி பகுதியில் ஐஸ் கடை மற்றும் பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது ஐஸ் கடையில் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது34) உடன் பணிபுரிந்து வந்துள்ளார். காலையிலிருந்து ஐஸ் வண்டிகள் வெளியே சென்று விற்பனையை முடித்துவிட்டு மீண்டும் இரவு ஐஸ் கம்பெனிக்கு வந்தடைந்து விடும். பின்னர் அதற்கு மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்வது தினசரி வாடிக்கையான ஒரு செயலாக இருந்து வருகிறது.

    அந்த ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார். சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் ஆன் செய்துவிட்டு வந்தபோது வண்டியில் இருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக செல்லப்பாண்டி மீது பாய்ந்தது.

    உடனே அவர் பயங்கர சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்த மின்சார சுவிட்ச் அனைத்தையும் அணைத்து விட்டு பின்னர் செல்லப்பாண்டியை வந்து பார்த்துள்ளனர். அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனை அடுத்து அவர்கள் அருகே இருந்த ஆட்டோ மூலம் செல்லப்பாண்டியை உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
    • ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 64). மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.

    இவரது மனைவி சாந்தி (57). இவர்களது மகன் அஜித் நிவாஸ் (34). நேற்று இரவு ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.

    இதில் ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    ×