search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் மரணம்"

    • பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாஜ்பூர்:

    ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஓரலி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ருத்ர நாராயண் சேத்தி என்ற மாணவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் ருத்ர நாராயண் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் விளையாடியதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக் கரணம் போட சொல்லி உள்ளார்.

    இதையடுத்து தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தபோது மாணவன் ருத்ர நாராயண் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு வந்த பெற்றோர் மாணவன் ருத்ர நாராயணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவன் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ரோகித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கோழி கறி சமைத்தனர். இதனை ரோகித் சாப்பிட்டார். பின்னர் ஜூஸ் அருந்தி விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல ரோகித்தை எழுப்பினர். படுக்கையை விட்டு எழுந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.
    • செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்.எலக்ட்ரீசியன். இவரது மகன் தமிழ் மாறன்(வயது8). காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்றுமாலை வீட்டில் இருந்த தமிழ்மாறன் தனது தாயின் சேலையை ஊஞ்சல்போல் கட்டி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தில் சேலை சுற்று இறுக்கியது. இதில் தமிழ்மாறன் மயங்கினான்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த பெற்றோர் அவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.

    இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
    • மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம். விகாராபாத் மாவட்டம், புதூர் மண்டலம் கேசவரெட்டிபள்ளியில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கார்த்திக் (வயது 8) என்ற மாணவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கார்த்திக் வகுப்பு ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.

    இதில் மாணவர் கார்த்திக்குக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உடல் நலம் குன்றியது.

    இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகம் கார்த்திக் வகுப்பறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திகை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

    மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்குதான் மாணவன் உயிரிழந்தான் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவன் சாவுக்கு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே காரணம். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    • மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
    • சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன் (வயது13). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். அவரது கணவர் சுந்தரமூர்த்தியும் பிரிந்து சென்று விட்டதால் விசித்திரனை சீனிவாசன் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.

    விசித்திரன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது அந்த நோய்க்கான உபகரணங்கள் தற்போது ஆஸ்பத்திரியில் இல்லை என்றும், உபகரணங்கள் வந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசித்திரனை சீனிவாசன் கண்காணித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு பேச்சியின்றி விசித்திரன் கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விசித்திரனை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு விசித்திரன் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் மைதானத்தை 4 முறை சுற்றி ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
    • மாணவன் மரணம் தொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளியின் மைதானத்தை சுற்றி 4 முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் திடீரென சுருண்டு விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடைபெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தகவல்
    • மாணவனின் உடலை நாளை காலை 10 மணிக்குள் பெற்றோர் வாங்கி இறுதி மரியாதை செய்ய உத்தரவு

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் சீனு கடையநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் பல இன்னல்களை அனுபவித்து வந்தான். சாதி ரீதியான கொடுமையெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. என் மகன் கல்வியில் மிகவும் ஆர்வமாக உள்ள மாணவன். கடந்த 14ம் தேதி சில ஆசிரியர்களால் எனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அவன் எனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாவில் மர்மம் இருக்கிறது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் என் அனுமதியின்றி பிரேத பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள். பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். எனவே, எனது மகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேணடும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, மருத்துவ குழு அமைத்துதான் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார். உடலை வாங்க மறுப்பதால் தினமும் 600க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதையெல்லாம் கேட்ட நீதிபதி, சமீப காலமாக பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது, அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என கூறினார்.

    மேலும், கடையநல்லூர் மாணவன் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதால், மாணவனின் உடலை நாளை காலை 10 மணிக்குள் பெற்றோர் வாங்கிக்கொண்டு இறுதி மரியாதை செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம், மாணவனின் உடலை தகனம் செய்யலாம் என கூறி, வழக்கை தென்மண்டல காவல் தலைவர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 

    • நீண்ட நேரமாகியும் மாடிக்கு சென்ற மகன் வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர்.
    • சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தான். அவன் அருகே சொல்யூஷன் டியூப் இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுராலு அருகே உள்ள சீனிவாசபட்டி காலனியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுவன் வாகனங்களின் டியூப்களுக்கு பஞ்சர் போடும் சொல்யூஷனை துணிகளில் வைத்து முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தான்.

    சொல்யூஷனை முகர்ந்து பார்ப்பதால் ஏற்படும் ஒரு வித போதைக்கு சிறுவன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது பெற்றோர் பலமுறை அடித்து பார்த்தும், கண்டித்தும் சிறுவனால் அந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்த சிறுவன் மாடிக்கு சென்றான். நீண்ட நேரமாகியும் மாடிக்கு சென்ற மகன் வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தான். அவன் அருகே சொல்யூஷன் டியூப் இருந்தது.

    சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் மரணம் குறித்து டாக்டர்கள் கூறுகையில்:-

    பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சொல்யூஷன், ஒயிட்னர் போன்ற சிறு போதை தரும் பொருட்கள் சிறுவர்களுக்கு தாராளமாக கிடைத்து விடுகிறது. ஒருவருக்கு இருக்கும் பழக்கம் அவருடன் பழகும் மற்ற சிறுவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

    இது போன்ற பழக்கத்திற்கு ஆளாகும் சிறுவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.

    போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவர்களை மீட்பது சிரமம். எனவே சிறுவர்களை அவர்களது பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் ஆர்யா தொங்கியபடி பயணம் செய்தான்.
    • மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென ஆர்யா தவறி கீழே விழுந்தான்.

    வேளச்சேரி:

    பெரும்பாக்கம், கலைஞர் நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ஆர்யா(வயது14). மேடவாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான்.

    இவன் கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் (எண்99) தொங்கியபடி பயணம் செய்தான். மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென அவன் தவறி கீழே விழுந்தான். இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் ஆர்யா பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ஆர்யா பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிர். இவரது மகன் ஹைடன்.
    • மாணவன் ஹைடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிர். இவரது மகன் ஹைடன் (வயது12). பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை மாணவன் ஹைடன் வீட்டின் அருகே விளையாடினான். பின்னர் அவன் வீட்டில் உள்ள தொட்டியில் குளித்துவிட்டு மாடிக்கு ஏறி சென்றான். அப்போது திடீரென மாணவன் ஹைடன் மயங்கி கீழே விழுந்தான்.

    உடனடியாக பெற்றோர் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஹைடன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவன் ஹைடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×