search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "store"

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவையில் வேலை பார்த்த கடையில் கட்டுமான பொருட்கள் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் மதுக்கரை மார்கெட்டில் கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் வெள்ளலூரை சேர்ந்த சுதிர் (50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை சுதிர் வாடகைக்கு எடுத்து சென்றார். பல நாட்கள் ஆகியும் அதனை திருப்பி ஒப்படைக்கவில்லை.

    அவரது செல்போனுக்கு கடை உரிமையாளர் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. இது குறித்து சுதாகரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுதிரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சங்கரன்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அச்சம்பட்டி ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சண்முகையா (வயது 82). சம்பவத்தன்று இரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1000 ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

     இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    திருட்டு சம்பவங்களை தடுக்க சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தீவிர வாகன சோதனை மற்றும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். 

    விசாரணையில் கருத்தானுரை சேர்ந்த சண்முகையா மகன் இளங்கோ (22), மனோகரன் மகன் மதன்குமார் (17), கண்ணன் மகன் முரளிஆனந்த் (19) என தெரியவந்தது. இவர்கள் பெட்டிக்கடையை உடைத்து ரூ. 1000 ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதை தவிர வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 3 கடைகளில் ரூ.11 லட்சம் கொள்ளையடித்த முகமுடி கொள்ளையர்கள் கேமிரா காட்சி மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் முகமது இக்பால் (வயது 55).

    இவர் கடந்த 21-ந்தேதி இரவு கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர். மேலும் அருகில் உள்ள ஹசியார், பக்ரீதின் ஆகியோர் நடத்தி வரும் 2 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ஹசியார் கடையில் ரூ.20 ஆயிரத்தையும், பக்ருதீன் கடையில் ரூ.3 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடி விட்டு கடையை திறக்க வந்த முகமது இக்பால் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல் 2 மளிகை கடைகாரர்களும் தங்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வியாபாரிகளும் பேராவூரணி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைத போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்க்ள யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொள்ளை நடந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து மர்ம நபர் கொள்ளையடிப்பது பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, பேராவூரணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், நகர மாணவர் அணி செயலாளர் கோவி. இளங்கோ ஆகியோர் கொள்ளை நடந்த கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் கொள்ளை நடந்தது பற்றி கேட்டறிந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் அதனை தடுக்க போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் குட்கா விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த சட்டங்களை மீறி சில இடங்களில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அடிக்கடி பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் தஞ்சை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய போது சீனிவாசன் (வயது 55) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தஞ்சை தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் புன்னை நல்லூரில் நடத்திய சோதனையில் பாலாஜி (35) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாடு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் சீனிவாசராகவன் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது புகாரி (48) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 15 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    பந்தநல்லூர் சப்-இன்ஸ் பெக்டர் நடராசன் பந்தநல்லூர் பகுதியில் கடைகளில் நடத்திய சோதனையின் போது சீனிவாசன் (31) என்பவரின் கடையில் இருந்து 5 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

    இது தொடர்பாக வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    ×