search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை"

    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
    • இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் செல்வன் (வயது 58).

    இவர், பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பிலும் மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் உருவம் சிக்கியது. இரண்டு கொள்ளையர்கள் மளிகை கடையில் உள்ள பொருட்களை 2 சாக்கு பைகளில் எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கடையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×