search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "groceries"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.
    • பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம், குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையிலுள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் இதர நோய்களினால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தினமும் பசியால் வாடுவதை கண்டு அவர்களுக்கு அன்னை தெரசா அமுதசுரபி அன்னதான திட்டத்தின் மூலம் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது .

    இத்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இத்தொடர் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இலவசமாக அன்னதானம் வழங்கிவரும் பவுண்டேசன் பணியினை பெரிதும் பாராட்டினார்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) மருதுதுரை முன்னிலை வகித்தார். மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டதின் மூலம் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம். கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம் மற்றும் குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அன்பு இல்லம், தஞ்சை நகர் பகுதிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அன்ன தானம் வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சாலை ஓரங்களில் வசிப்ப வர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள், கூலித்தொ ழிலாளர்கள், அரசு மருத்துவ மனையிலு ள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ஆகியோர் பயனடைகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் நிறுவனர் நெல்சன், உடுமலை நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகர்நல அலுவலர் கௌரி சரவணன் ,சுகாதார ஆய்வாளர் செல்வம், வியாபாரிகள் சங்கதுணைசெயலாளர் தங்கமணி, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

    ×