search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steve Smith"

    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் பாகிஸ்தானில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என்று டி வில்லியர்ஸ், ஸ்மித் தெரிவித்துள்ளனர். #PSL
    இந்திய பிரிமீயர் லீக், பிக் பாஷ், கரிபியன் பிரிமீயர லீக் டி20 கிரிக்கெட் தொடரை போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லீக்கை நடத்தி வருகிறது. சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி, பிளே-ஆப்ஸ் போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்தி வருகிறது. 2019 சீசனில் பெரும்பாலான ஆட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஓய்வு அதிக அளவில் உள்ளது.



    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித்தும் ஓராண்டு தடை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

    இரண்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் மேலும் பிரபலமடையும். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும்தான் விளையாடுவோம். பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக கரிபியன் ப்ரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #CPL2018 #Smith
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டதால், இந்த தொடரில் முதன்முறையாக பங்கேற்று விளையாடி வந்தார்.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக ஸ்மித் விளையாட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடிவயிற்றில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. மேலும், இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஸ்மித் பார்படோஸ் அணிக்காக 7 போட்டியில் 185 ரன்கள் சேர்த்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #Smith
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இவர் கடந்த 32 மாதமாக டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் இருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும், வார்னருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதித்தது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் அடித்தார். ஒரே டெஸ்டில் 200 ரன்கள் அடித்ததால் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்நிலையில் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பிய பின்னர், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று சக வீரரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக ஸ்டீவ் ஸ்மித் எப்படி விளையாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கடுமையாக விளையாடக் கூடியவர். மற்ற எந்த வீரரையும் விட அதிக பந்துகளை சந்திக்கக் கூடியவர். அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக் கூடியவர்.

    ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பி, அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் அடித்து உலக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்குவார்கள். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை’’ என்றார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதன்முறையாக கரிபியன் பிரீமியர் லீக் தொடர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #CPL #Smith
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். இந்த வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது மார்ச் மாதம் கேப்படவுனில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்.

    இதுதொடர்பான விசாரணையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிக குறைவான லெவல் தொடர்களிலும், வெளிநாட்டு லீ்க் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.



    முதன்முதலாக கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடினார். அதன் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    அந்த அணியில் இடம்பிடித்திருந்தது வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியதால் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 155 டி20 போட்டிகளில் விளையாடி 3124 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.03 ஆகும்.
    தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார். #MohammadAmir
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு தண்டனை காலம் முடிவடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும்போது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரை மனதார வரவேற்றார். முகமது ஆமிர் பல இடங்களில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலியும் ஆமிர் பந்து வீச்சை பாராட்டியுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸமித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி சிறந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஈஎஸ்பின்கிரிக்இன்போ-விற்கு ரேபிட்-பையர் பேட்டியளித்தார். அப்போது தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.



    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முகமது ஆமிர் அளித்த பதில்களும்,

    கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற போட்டியில் விளையாடும் வீரர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

    செர்ஜியோ அக்யூரோ

    கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டியில் சாம்பியன் டிராபியை வெல்ல நினைத்தால், அந்த விளையாட்டு?

    கால்பந்து

    உங்கள் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டால், யாரை உங்கள் கேரக்டரில் நடிக்க வைப்பீர்கள்?

    ஷாகித் கபூர்

    ஒரு சாதனையை நீங்கள் விரும்புகீர்கள் என்றால்?

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்

    நீங்கள் எப்படி நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள்?

    ஹோட்டலில் படம் பார்த்து

    எந்த கிரிக்கெட் வீரரின் ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?

    என்னுடைய ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கும். அதன்பின் ஷாகித் அப்ரிடி ஹேர்ஸ்டைல்

    நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசியிருக்கனும் என்றால், அது யார்?

    பிரையன் லாரா. ஏனென்றால் அவரது காலக்கட்டத்தில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.

    நீங்கள் மீண்டும் பிறந்தீர்கள் என்றால், யாராக ஆசைப்படுவீர்கள்?

    முகமது ஆமிர்

    நீங்கள் சமீபத்தில் பார்த்த பாலிவுட் படம்?

    பத்மாவத்

    உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் மைதானம்?

    இங்கிலாந்து ஓவல். அதில் எராளமான நினைவுகள் உள்ளன.

    கிரிக்கெட்டில் ஒரு விதிமுறையை மாற்ற விரும்பினால்?

    நோ-பாலில் ப்ரீ ஹிட்

    நீங்கள் உங்களுடன் விளையாடும் சக வீரர் ஒருவருடன் குறும்பு செய்ய விரும்பினால்?

    அது லென்டில் சிம்மன்ஸ். கராச்சி அணியில் விளையாடும்போது மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி விளையாட தடைவிதிக்கப்பட்டதை அடுத்து குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாடிய ஸ்மித் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். 6 அணிகள் மோதும் இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற குளோபல் டி20 கனடா போட்டியில் களம் இறங்கினார். 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்மித்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றது. ஸ்மித்துடன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னரும் இந்த லீக்கில் விளையாடி வருகிறார்.


    ஸ்மித் இந்த லீக் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பேசிய கிறிஸ் கெய்ல், 'ஸ்மித் மற்றும் வார்னர் செய்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளது. தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் உழைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான இடத்தை வழக்க வேண்டும். மனிதர்கள் தவறு செய்வது வழக்கம். அதனை திருத்திக் கொள்ள அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறினார்.

    ஓராண்டு தடைக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால் தானாகவே உலகக்கோப்பைக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளார். #Smith #Hussey
    ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும், துணைக் கேப்டனாகவும் விளங்கியவர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கான போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளது.

    ஆனால், தரம்குறைந்த உள்ளூர் போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னணி பேட்ஸ்மேன்களான இவர்கள் இருவரும், பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்டிசெல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் தடுமாறி வருகிறது.

    எப்போதும் இல்லாத அளவிற்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அத்துடன் 481 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான உலக சாதனையை தன்வசமாக்கியுள்ளது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இடம்பிடிப்பதில் சிக்கல் இருக்காது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘தற்போது வரை இதுகுறித்து பேசுவது கடினம்தான். ஆனால், தரமான வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்பதை நீங்கள் சொல்லனும். அணியின் வளர்ச்சிக்கு அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வார்கள். அவர்கள் சிறந்த டச் உடன்தான் இருக்கிறார்கள். அதேபோல் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். காயம் குறித்த எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் சரியாக இருந்தும், தரமான வீரர்கள் என்பதால் நேராக உள்ளே வருவது குறித்து யோசிக்க வேண்டும்.

    நீண்ட காலமாக அவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அணிக்க திரும்ப எல்லா வழிகளும் உள்ளது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    கனடா டி20 லீக் தொடரில் விளையாட இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை மனதார வரவேற்கிறேன் என்று டேரன் சமி தெரிவித்துள்ளார். #GT20CL
    குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இரண்டு முறை டி20 கோப்பையை ருசித்தவரும் ஆன டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

    அவரை டேரன் சமி மனதார வரவேற்றுள்ளார். இதுகுறித்து டேரன் சமி கூறுகையில் ‘‘நாம் எல்லோரும் நமது வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருப்போம். இது விளையாட்டில் மட்டுமல்ல. பொதுவான விஷயத்திலும் கூட.

    உண்மையிலேயே ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கிரிக்கெட் வீரர். அவரை போன்ற ஒருவர் யாரென்றாலும் என்னுடைய அணியில் எந்த நாளிலும் சேர்த்துக் கொள்வேன். என்னுடைய அணியில் இதுபோன்ற சிறந்த வீரர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.



    தென்ஆப்பிரிக்காவில் என்ன செய்தாரோ, அதற்கான தண்டனையை சந்தித்து வருகிறார். தேசிய அணியின் கேப்டனாக செயல்படும் நபர்தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அவரது சொந்த அணி மாதிரி. மைதானத்தில் அவரது செயலுக்காக பொறுப்பை எடுத்துக் கொண்டார்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவி வாய்ப்பு வந்தால், ‘நோ’ சொல்லமாட்டேன் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUS
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக வார்னரும் செயல்பட்டு வந்தனர். ஆஸ்திரேலியா சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

    கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக் காரணமாக வார்னர் செயல்பட்டார் என்றும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மூன்று பேருக்கும் தடைவிதித்தது.



    தடைவிதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், துணைக் கேப்டன் நியமிக்கப்படவில்லை.

    இந்நிலையில் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனுக்கு துணைக் கேப்டன் பதவிக்கான ஆசை துளிர்விட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘துணைக் கேப்டன் வாய்ப்பை எனக்கு வழங்கினால், நான் அதை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன்’’ என்றார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின் தொடர்ந்து நான்கு நாள்கள் அழுததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். #SteveSmith #BallTamperingScandal
    சிட்னி:

    தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சமுதாய சேவை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஸ்மித் சிட்னி பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். ஆண்களின் மன ஆரோக்கியத்திற்காக நிதிதிரட்டுவதை மேம்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'உண்மையை கூற வேண்டும் என்றால் நான் நான்கு நாட்களாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.


    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. இந்த நாட்கள் நான் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்' என கூறினார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் பிரச்சனையில் சிக்கிய பின் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. #SteveSmith #BallTamperingScandal



    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார்.

    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

    கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கேப்டனான ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. தற்போது சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    இந்த மாதம் நடைபெற இருக்கும் குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாட இருக்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளார். கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு வருமானத்தை வழங்குகிறார்.
    ×