என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "srilankan navy"
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 30-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக்கூறி மிரட்டியதோடு உடனே இங்கிருந்து செல்லுங்கள் என விரட்டினர்.
மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்றனர். #Rameswaramfishermen #fishermen
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 600 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 7 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற் படையினர் வந்தனர்.
அவர்கள் தங்கள் படகை, விசைப்படகுகளின் மீது மோதுவது போல் வந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது அவர்களது வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எறிந்து சேதப்படுத்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது தாக்குதல் ஆகும்.
இதனால் எங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க முடியாத நிலையிலும் வலை உள்ளிட்ட உடமைகளும் சேதப்படுத்தப்பட்டதால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.
அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.
“வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.
ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் அபராதம் விதிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சிறப்பு சட்டத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அண்மையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 3 படகுகளை அந்த நாட்டு நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்தும் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளையும், ஏற்கனவே பராமரிப்பிமின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக 6 ஆயிரம் மீனவர்களும், மீன்பிடி உபதொழிலை சேர்ந்த 20 ஆயிரம் பேரும் வேலை இழந்து உள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாழ்வாதாரத்தை ஒடுக்க இலங்கை அரசும் கடும் சட்டங்களை இயற்றி வருகிறது.
இதனால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் இன்னும் 1 வாரத்துக்கு மேல் தொடரும் என தெரிகிறது. எனவே நாங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளி மாநிலத்திற்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்றனர். #RameswaramFishermen
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவித்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட 168 விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்க காலதாமதம் செய்கிறது.
இந்த நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராமேசுவரத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே அங்கு எந்த பராமரிப்பு இன்றியும் உள்ள 168 விசைப்படகுகளை காலதாமதமின்றி விடுவிப்பதோடு சேதமான படகுகளுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது.
இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் மீனவர்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் நாங்கள் கடலுக்கு உயிர் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அடிக்கடி இதுபோன்ற வேலை நிறுத்தம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். #RameswaramFishermen
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்த பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், அவர்கள் பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுபற்றி விசாரித்த போது இலங்கை கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன்பிடித்ததாக கூறி அங்குள்ள கடற்படையினர் சிறை பிடித்தது தெரியவந்தது. இலங்கையில் வத்தலக்குண்டு என்ற இடத்தில் வைத்து கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ என்றனர். #TNFishermen
தமிழக - இலங்கை எல்லையான கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு விரட்டியடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே ஒரு படகுடன் மீன்பிடித்து கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்