search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman arrested"

    துபாய் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றனர். #tamilnadufishermen

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா களிமண்குண்டு மங்களேசுவரி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி, ராமநாதபுரம் வைர வன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாலகுமார், திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் சதீஷ், தங்கராஜ் மகன் துரைமுருகன், செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டணத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேரும் துபாய்க்கு மீன்பிடி ஒப்பந்த கூலித்தொழிலாளர்களாக பணி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தனர்.

    இவர்கள் துபாய் நாட்டு கடல் பகுதியில் படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் நாட்டுக் கடற் படையினர், தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் ஊடுருவி வந்ததாக கூறி 6 மீனவர்களையும் சிறைப் பிடித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் கவலையுடன் காணப்பட்டனர்.

    ஈரான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட் டமைப்பின் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnadufishermen

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. #TNFishermen #SriLankanNavy
    புதுக்கோட்டை: 

    இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 

    அந்த வகையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், இரு வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLankanNavy

    கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    ×