என் மலர்
செய்திகள்

கடலூரில் மாணவி பாலியல் பலாத்காரம்: மீனவர் கைது
கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.
Next Story