search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
    X

    கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
    இராமேஸ்வரம்:

    தமிழக - இலங்கை எல்லையான கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு விரட்டியடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

    இந்நிலையில் கச்சத்தீவு அருகே ஒரு படகுடன் மீன்பிடித்து கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
    Next Story
    ×