search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special worship"

    • அரை இறுதி-இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    மதுரை

    இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்க ளில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்று (15-ந்தேதி) நடைபெறும் அரை இறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், நான் காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    நாளை (16-ந்தேதி) நடை பெறும் போட்டியில் இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெல்லும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும். இது வரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் வென்று இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்துள் ளது.

    இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதை பிர தான பிரார்த்தனையாக வைத்து, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோவிலில் இந்த விசேஷ பூஜை நடத்தப் பட்டது. நேற்று மகா பெரி யவரின் அனுஷ நட்சத்திர நாள் என்பதால், அவரது விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா–தனை நடைபெற்றது.

    மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து இந்த பூஜையை நடத்தின. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட் டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, கோப் பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலகக்கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அச்சிடப் பட்ட அட்டைகள் தனித்த னியே கொடுக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.

    மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனரும், ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவருமான நெல்லை பாலு, சங்க செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன், பட்டய உறுப்பினர்கள் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அத்வி மீடியா ஆத வன், மருத்துவர் புகழேந்தி, சுப்பிரமணியன், ராஜ்குமார் உட்பட பெண்கள், 

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.

    பின்னர் பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நரிக்குடி எமனேஸ்வரர்கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
    • நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் சூழலியம்மன், மூலவர் குருபகவான்.

    கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ் வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டடது.

    மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

    உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குரு தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் திரளா பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையிலும், மாவட்ட செயலாளர் கருப்பையா முன்னிலையிலும் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பால்ராஜ், பிரச்சார செயலாளர் மார்ட்டின், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், சதீஷ் மணிகண்டன், வேல் முருகன்,பாலமுருகன், டால்பின் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
    • நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
    • நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பகவா னால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரு மாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முதல் தென்திருப்பேரை வரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவதிருப்பதி கோவி ல்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இந்த நவதிருப்பதி தலங்களில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

    தென்திருப்பேரை

    நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திரு ப்பேரை மகர நெடுங் குழை க்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரி சையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமி நிகரில் முகில் வண்ணன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடிமரம் கருடன் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வரிசையில் நின்று வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    இதேபோல் நவத்தி ருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயா சனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாய கூத்தப்பெருமாள், இரட்டை திருப்பதி தேவர் பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    • அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசியை அடுத்த புதுப்பளையம் விநாயாகா் கோவிலில், மழை வேண்டியும், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும் பொதுமக்கள் மழைச் சோறு வாங்கும் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டனா்.

    இதையடுத்து, கன்னிப் பெண்களுடன் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து விநாயகா் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னோா்கள் நம்பிக்கைப்படி மழை வேண்டி வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து, விநாயகருக்குப் படையலிட்டு அனைவரும் பிரசாதமாக எடுத்துக்கொள்வோம்.

    இதையடுத்து மழையில்லாத ஊரில் குடியிருக்க மறுத்து விவசாயிகள் பயன்படுத்தும் கூடை, முறம் ஆகியவற்றை ஊா் எல்லையில் எரிந்து விட்டு பெண்கள் ஊரைவிட்டு சென்றுவிடுவா். பின்னா் மழை வந்துவிட்டது என்று அவா்களை அழைத்து வந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவோம்.

    இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மழைவேண்டி மழைச்சோறு வழிபாடு நடத்தினோம். மேலும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறக் கோரி கூட்டுப்பிரார்த்தனை செய்யவுள்ளோம் என்றனா். :

    • சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    மயிலாடுதுறை

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையொட்டி ஏற்பாடு
    • வெள்ளாண்டப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பி க்கப்பட்டது.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டி ருந்தன.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம்

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் உள்ள வெள்ளாண்டப்பனுக்கு சிறப்பா அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபா ரதனை காண்பிக்கப்பட்டது. விடியற்காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 கிலோமீட்டர் நடந்து சென்று, பொரி, கடலை, சர்க்கரை பொங்கலுடன் சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேலும் பக்தர்கள் மொட்டையடித்தும், குழந்தை வரம் வேண்டி அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணம் வரம் வேண்டி தாலிக்கயிறு கட்டியும், வேலை வேண்டி கோரிக்கை அடங்கிய பேப்பரை மரத்தில் கட்டி வேண்டினர்.

    • திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.
    • கருடபெருமாள் சிறப்பு காய்கறிஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான எம்.செட்டிபாளையம், சுல்தான்பேட்டை,நீலிகணபதிபாளையம்,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமி நிகரில் முகில்வண்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கொடிமரம் கருடன் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    நவதிருப்பதி கோவில்கள்

    இதேபோல் நவத்திருப்பதி களில் ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தர். இதற்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ×