search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
    • நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பகவா னால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரு மாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முதல் தென்திருப்பேரை வரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவதிருப்பதி கோவி ல்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இந்த நவதிருப்பதி தலங்களில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

    தென்திருப்பேரை

    நவத்திருப்பதி தலங்களில் 7-வது தலமான தென்திரு ப்பேரை மகர நெடுங் குழை க்காதர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரி சையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமி நிகரில் முகில் வண்ணன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடிமரம் கருடன் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வரிசையில் நின்று வழிபட்டு துளசி தீர்த்தம் பெற்று சென்றனர்.

    இதேபோல் நவத்தி ருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயா சனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாய கூத்தப்பெருமாள், இரட்டை திருப்பதி தேவர் பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் ஆகிய நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சுவாமி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×