search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "final win"

    • அரை இறுதி-இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    மதுரை

    இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்க ளில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்று (15-ந்தேதி) நடைபெறும் அரை இறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், நான் காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    நாளை (16-ந்தேதி) நடை பெறும் போட்டியில் இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெல்லும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும். இது வரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் வென்று இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்துள் ளது.

    இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதை பிர தான பிரார்த்தனையாக வைத்து, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோவிலில் இந்த விசேஷ பூஜை நடத்தப் பட்டது. நேற்று மகா பெரி யவரின் அனுஷ நட்சத்திர நாள் என்பதால், அவரது விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா–தனை நடைபெற்றது.

    மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து இந்த பூஜையை நடத்தின. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட் டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, கோப் பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலகக்கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அச்சிடப் பட்ட அட்டைகள் தனித்த னியே கொடுக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.

    மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனரும், ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவருமான நெல்லை பாலு, சங்க செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன், பட்டய உறுப்பினர்கள் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அத்வி மீடியா ஆத வன், மருத்துவர் புகழேந்தி, சுப்பிரமணியன், ராஜ்குமார் உட்பட பெண்கள், 

    ×