search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர்"

    • மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.
    • குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.

    இதனால் அதியமான், எப்போதும் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

    குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    அதன் அடையாளமாக இன்றும் இக்கோவிலில் வாள் வைத்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கோவில் அமைவிடம்

    தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் கோவில்.

    தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது.

    பஸ் நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.
    • ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    12 ராசிக்காரர்கள் கால பைரவரின் எந்தெந்த பகுதியை வணங்கினால் தோஷம் விலகும் என்பதை பார்ப்போம்.

    மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.

    ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    மிதுன ராசிக்காரர்கள் தோல், புஜம் இவற்றை பார்த்து வணங்கினால் தோஷம் நீங்கும்.

    கடக ராசியினர் மார்பு பகுதியை வணங்க தோஷம் குறையும்.

    சிம்ம ராசிக்காரர்கள் வயிறு பகுதியை வணங்க வேண்டும்.

    கன்னி ராசியினர் பைரவ பெருமானின் குறியை வணங்க வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் தலை பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    விருச்சிக ராசிக்காரர்கள் முட்டி பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    தனுசு, மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    கும்ப ராசியினர் கணுக்காலை வணங்க வேண்டும்.

    மீன ராசிக்காரர்கள் பாதத்தை பார்த்து வணங்க வேண்டும்.

    • செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம்.
    • ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.

    தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்யலாம்.

    செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.

    மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள்.

    வீட்டில் இருந்தே பைரவரை வழிபடலாம். பைரவாஷ்டகம் சொல்லி, பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.

    அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வது, இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் நீக்கிவிடும்.

    தடையின்றி காரியங்கள் நிகழும்.

    வீட்டின் தரித்திரத்தைப் போக்கி அருளுவார் பைரவர்.

    அஷ்டமி நாளில், பைரவரை நினைத்துக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் தோஷங்களில் இருந்தும் சாபங்களில் இருந்தும் விலக்கு அளிக்கும். விமோசனம் பிறக்கும் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையில் (மாலை 3 முதல் 4.30 மணிக்குள்) விளக்கேற்றுங்கள்.

    பயமில்லாத வாழ்க்கையைத் தந்தருள்வார் பைரவர்.

    எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார்.

    • தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.
    • பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி.

    அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது மிகவும் பலத்தைக் கொடுக்கும்.

    தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு தேய்பிறை அஷ்ட மியிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்களில் நடைபெறும்.

    அதே போல், அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.

    பொதுவாகவே ராகுகால வேளையில் விளக்கேற்றி துர்கை பூஜை செய்வது மகத்துவமானது என்பார்கள்.

    அப்போது துர்காதேவியை நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அஷ்டமியன்று, துர்கா தேவியுடன் அஷ்டமிக்கு உரியவரான பைரவரை மனதார வழிபட்டால், மகத்தான பலன்கள் நிச்சயம்.

    கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. கால பைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும்.

    கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்கே தெரியாத எதிரிகள் எல்லோரும் வீரியம் இழந்து போவார்கள்.

    பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ... அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    • அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.
    • இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    இத்தகைய சிறப்புகள் பெற்ற கால பைரவரை அதியமான் மன்னன் வழிபட்டு மனசங்கடங்கள் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றார்.

    அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.

    மேலும் தன் கோட்டை சாவி, கஜானா சாவி என அனைத்தும் கால பைரவரிடம் வழங்கி பாதுகாத்து வந்தார்.

    அதுமட்டுமின்றி அதியமான், தனது வீரவாளை தினமும் கால பைரவரின் பாதங்களில் வைத்து காலையும், மாலையும் பூஜைகள் செய்து எடுத்து சென்றார்.

    அதனால் தான் அவரது நினைவாக இன்றும் கூட இக்கோவிலில் கால பைரவரின் திருக்கரங்களில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    அவரின் தலையிலே அக்னி பிழம்பை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும் கழுத்தினில் கபால மாலையுடனும் பூணூல் அணிந்தும் அரைஞான் கயிறாக பாம்மை முடிந்தும் கால்களிலேயே சலங்கினை கொண்டும் காட்சியளிக்கிறார்.

    மேலும் தனது நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையுடன் கீழ்கரத்தில் திரிசூலத்துடனும் இடதுமேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும் ஏந்தியுள்ளார்.

    மேலும் பத்மா பீடம் என்று சொல்லக்கூடிய பீடத்தில் அசுரசோன வாகன என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தில் நின்ற கோலத்துடன் நிர்வாணமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.
    • அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னன் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள் தீர்க்க வேண்டி அவரின் அரச வையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.

    அப்போது ஜோதிடர்கள் , மன் னன் அதியமானிடம், "உங்கள் மனசங்கடங்கள் தீர்ந்து நிம்மதியும், வெற்றியும் பெற வேண்டுமானால் கால பைரவருக்கு தனிக்கோவில் கட்ட வேண்டும்.

    ஆனால் ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.

    அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    எனவே காலபைரவர் அவதரித்த காசிக்கு சென்று கால பைரவர் கோவிலில் திருகங்கை பூஜை செய்து காசி கால பைரவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

    கங்கை நதியில் இருந்து கல்லெடுத்து கால பைரவரின் கோவிலுக்கு சிலை வடிவமைத்து அதற்கான பூஜைகளை செய்து அங்கிருந்து அதியமான்கோட்டைக்கு கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டும்.

    மேலும் கோவில் மகா மண்டபத்தில் ஒன்பது நவக்கோள்களின் சக்கரத்தையும் மகா மண்டப மேல்கூரையில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்"என்று தெரிவித்தனர்.

    இதன்படி மன்னர் அதியமான், தனது படைகளுடன் காசிக்கு சென்று காசி காலபைரவரின் அருளுடன் சிலையை வடிவமைத்து பூஜைகள் செய்து அதியமான்கோட்டையில் மயானத்தில் கால பைரவரை எழுந்தருள செய்தார்.

    • சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.
    • இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அதிய மான்கோட்டையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடு மான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட ஸ்ரீதட்சிணகாசி கால பைரவர் கோவில் கட்டப்பட்டதாகும்.

    காசிக்கு அடுத்தப்படியாக கால பைரவருக்கு என்று இந்தியாவிலேயே 2வது திருத்தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.

    எமனும் நடுங்கும் தோற்றம்

    சிவபெருமானின் அவதாரமாக விளங்கக் கூடியவர் கால பைரவர்.

    தனிக்கோவிலாகிய விளங்கக்கூடிய காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.

    உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் கால பைரவரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

    இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    எனவே வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சினைகளும் மன சங்கடங்களும் நீங்கப் பெறும் ஒரே கோவில் ஆகும்.

    எல்லாவிதமான வழிபாட்டுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
    • அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    குழந்தைச் செல்வம் பெற:

    திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதிய ருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

    சனீஸ்வரரின் குரு பைரவர் என்ப தால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார்.

    எனவே, நாம் சனிக் கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

    ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

    அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    6 சனிக் கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கை கூடும்.

    தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறை வேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    • தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    • பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    பஞ்ச தீபம்

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

    பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

    பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இழந்த பொருட்களை மீண்டும் பெற:

    பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    • இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
    • அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் உள்ள உன்மந்திர பைரவரின் திருமேனியில் 27 நட்சத்திரமும், 12 ராசியும் அடக்கம்.

    எனவே இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

    மேலும் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு

    அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.

    அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் விரதம் இருந்து பைரவருக்கு பூஜைகள் செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

    தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் எண்ணையால் தீபமேற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்ல அருள் கிடைக்கும்.

    • தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    தொட்டில் பூஜை

    நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற அதியமான் கோட்டை

    ஸ்ரீதட்சிணகாசி கால பைரவருக்கு ருத்ரா அபிஷேகம் செய்து கால பைரவர் (உற்சவமூர்த்தி) தொட்டிலில் இட்டு

    வடுக பைரவ சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து தொட்டில் ஆட்டினால் இல்லத்தில்

    குழந்தை பாக்கியம் பெற்று வீட்டில் தொட்டில் ஆட்டலாம்.

    காசியில் இருந்து பல்லக்கு மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை

    9ம் நூற்றாண்டில் எதிரிகளால் அதிக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன.

    அப்போது தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

    அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மன்னர் அதியமான் காசியில் இருந்து சிலைகளை அதியமான் கோட்டைக்கு கொண்டு வந்து கால பைரவர் கோவிலை கட்டினார்.

    அந்த சமயத்தில் கால பைரவர் சிலையை காசியில் இருந்து தருமபுரிக்கு பல்லக்கு மூலம் தூக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ×