என் மலர்
நீங்கள் தேடியது "KALABHAIRAVA"
- காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
கரூர்:
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், நந்தி பெருமான், பாகவள்ளி அம்பிகை சமேத மேகவாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர்,தி ருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
- காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
பூஜையில் பல்குதர்கள் குடும்பம் செழிப்படைந்து, கஷ்டங்கள் தீர பஜனை பாடி பைரவருக்கு வழிபாடுகள் செய்து பாலபிஷேகம் உட்பட 16 சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.
இதே போல பல்லடம் பொன்காளியம்மமன் கோவில், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் காலபைரவர் கோவில், சித்தம்பலம் நவகிரகக்கோட்டை சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.
பின்னர் பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நரிக்குடி எமனேஸ்வரர்கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது






