search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலபைரவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    X
    காலபைரவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    குத்தாலம் அருகே காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் புகழ் வாய்ந்த கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

     இந்த கோவிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்ச தீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். 

    அதன்படி, இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. 

    பின்னர், பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×