search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Railway"

    • மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து.
    • பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

    மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
    • மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.

    சேலம்:

    சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

    பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும்.

    ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு ஈரோட்டை அடையும்.

    நாளை (23-ந் தேதி) தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இயக்கம் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறதது. மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.

    நாளை (23-ந் தேதி) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 24-ந் தேதி தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் வருகிற 26-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் புறப்படும்.

    வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
    • சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

    திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12624) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலமான கழக்கூட்டம், சிராயின்கீழ் மற்றும் கடகவூர் பகுதிகளில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    மேலும், கொல்லத்தில் இருந்து 25-ந் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    இதேபோல, கொச்சுவேலியில் இருந்து வரும் 25-ந் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06429) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தெற்கு ரெயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.
    • விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம்.

    சென்னை:

    சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் இயக்கங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் சீரான இடைவெளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி நேற்று சென்னை கடற்கரை - தாம்பரம் பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ரெயில் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ரெயில் இணைப்புகளை சரிபார்த்தல், வெல்டிங் பணிகள், கனரக எந்திரங்கள் மூலம் தேவையற்ற கழிவுகளை அகற்றுதல் மற்றும் பிற பாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முக்கியமான வழித்தடப் பணிகள் பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டியதால் 44 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாதை பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். இருப்பினும், பயணிகளின் சிரமத்தை தவிர்த்திடும் வகையில், தெற்கு ரெயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம். தண்டவாளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ரெயில் தடம் புரல்வதை தடுக்க ரெயில்வே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படாது.

    * கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

    * இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    * தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரெயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
    • இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
    • தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2-ந்தேதி ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.

    இதன்படி தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.

    ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

    ரெயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது.

    இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.

    1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீப் ஒன்றிய ரெயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் ரெயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

    முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு ரெயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

    அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரெயில்வேயில் கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு ரெயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய ரெயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
    • ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

    ×