என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Snacks"
- குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
- முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 10
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு
எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)
புளி தண்ணீர்- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.
* பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.
* அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.
* வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.
* இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.
* இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
* சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை சுத்தமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
* ஒரு பாத்திரத்தில் மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
* அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்து குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
* ஒரு எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இட்டு கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.
* ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் துக்கடாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* இப்போது சூப்பரான கார துக்கடா ரெடி
இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
- இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3/4 கப்
கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 டம்ளர்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.
ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.
இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.
இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
- வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 400 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
பக்கோடா செய்ய :
கடலை மாவு - 1 கப்
சீரகம் - 4 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.
ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.
அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
- இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.
பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
ருசியான மீன் வடை தயார்.
இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மட்டன் வைத்து தான் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
- இன்று வாழைக்காய் வைத்து கோலா உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
வெங்காயம் - 2
பொட்டுக்கடலை - 1 கையளவு
தேங்காய் - 1/4 மூடி துருவியது
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
ஏலக்காய் -3
கசகசா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- கையளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயின் தோல் நீக்கி விட்டு அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சோம்பு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கசகசா, வெங்காயம், கொத்தமல்லித்தழை, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே மிக்ஸி ஜாரில் துருவிய வாழைக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஒரே மாதிரியான அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். உருண்டை பிடிச்ச முடியவில்லை என்றால் சிறிது கடலை மாவு சேர்த்துகொள்ளலாம்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பின் தீயினை மிதமாக வைத்து ஒவ்வொரு 4 முதல் 5 உருண்டைகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுவென வாழைக்காய் கோலா உருண்டை ரெடி!
இதற்கு டொமேட்டோ கெட்ச் அப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோள மாவு - தேவையான அளவு
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்க
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுளாக(cube shape) வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய உருளைக்கிழங்கை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
5 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
ஒரு பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு நன்றாக குலுக்கவும். இப்போது சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு பாப்கார்ன் ரெடி.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சிக்கனை பல்வேறு ருசியான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம்
முட்டை - 2
வெங்காயத்தாள் - 20 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பிரெட் தூள் - 20 கிராம் + தேவையான அளவு
சோள மாவு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பிளாஸ்டிக் கவரை கேன் வடிவில் (Piping bag) செய்து கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.
மிக்சிஜாரில் சிக்கனை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், பிரெட் தூள் 20 கிராம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கன் விழுதை (Piping bag) கேன் கவரில் போடவும்.
ஒரு தட்டில் பட்டர் பேப்பரை விரித்து அதன் மேல் அரைத்த விழுதை டோநட்ஸ் வடிவில் செய்யவும். செய்ததை பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்கவும். பிரிட்ஜில் வைத்த உடன் அவை சற்று கெட்டியாகி இருக்கும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து டோநட்ஸை எடுத்து சோள மாவில் நன்றாக பிரட்டி பின் முட்டையில் முக்கி மீண்டும் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் டோநட்ஸ் ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய செலவோ குறைவு. சுவையோ அதிகம்.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்
சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.
பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.
பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
சீஸ் துருவல் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
ஓரிகானோ - அரை டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.
- இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.
- இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு ஆரோக்கியமான உணவு.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 1/2 லிட்டர் + 3 கப்
பச்சை மிளகாய் - 15 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)
இஞ்சி - விரல் அளவு 1 துண்டு
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் துண்டுகள்(பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
வெந்தயம் இலைகள் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* வெந்தயம் இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்
* மிக்சிஜாரில் ப.மிளகாய், இஞ்சி, ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
* பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை போட்டு கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய தேங்காய் துண்டுகள், வெந்தயம் இலைகள், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
* ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் வைக்க வேண்டும்.
* இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மாவை அனைத்தையும் செய்ய வேண்டும்.
* இட்லி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.
* இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.
* வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்