search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smith"

    கேப் டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைக்கேப்டனாக இருந்த வார்னர் என்னைத் தூண்டினார் என கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். #BallTampering
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைக் கேப்டன் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

    இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

    இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

    சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
    பால் டேம்பரிங் விவகாரத்தில் முதன்முறையாக பேட்டியளித்த ஸ்மித், வாய்ப்பிருந்தும் தடுக்கவில்லை, கேப்டன் பொறுப்பில் தோற்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். #Smith
    கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை ஒருவகை உப்புத்தாள் மூலம் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக்காரணமாக டேவிட் வார்னர் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும். அவர் தடுக்க தவறிவிட்டார் என்றும் தெரியவந்தது.

    இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்த ஸ்மித், சிட்னி மைதானத்தில் கண்ணீர் மல்க சோகத்துடன் வெளியேறினார்.

    இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் உள்ளூரில் நடைபெறும் முதன்மையான தொடர்களிலும், சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாமல் உள்ளனர்.

    இந்நிலையில் முதன்முறையாக இன்று ஸ்மித் பத்திரிகையாளர்கள்கு பேட்டியளித்தார். அப்போது பால் டேம்பரிங் சம்பவத்தை நான் தடுத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    பால் டேம்பரிங் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் நான் சிலரை கடந்து செல்லும்போது, பால் டேம்பரிங் திட்டத்தை தடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், நான் அதை செய்யவில்லை. என்னுடைய கேப்டன் பொறுப்பு தோல்வியடைந்து விட்டது. இது சில விஷயங்கள் நடப்பதற்கு சாத்தியக்கூறாக அமைந்துவிட்டது. இந்த திட்டம் வெளியில் சென்று மைதானத்தில் நடந்துவிட்டது.

    அதைப்பற்றி எதுவும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்வதைவிட, திட்டத்தை நிறுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். கேப்டனாக எனது பொறுப்பில் நான் தோற்றுவிட்டேன். அதற்காக நான் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்’’ என்றேன்.
    வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிசிபி தடைவிதித்துள்ளது. #BPL #BCB
    வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வங்காளதேசம் பிரிமீயர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது.

    சோயிப் மாலிக் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடைவிதித்துள்ளது.



    இதுகுறித்து பிசிபி தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘வங்காள தேசம் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை.

    ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்’’ என்றார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ஏலத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸை வாங்கியுள்ளது. #PSLDraft2018 #PSL
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2019 சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் தெரிவித்திருந்தார்.

    இன்றைய ஏலத்தில் இருவரும் பிளாட்டினம் பிரிவில் இடம்பிடித்திருந்தனர். டி வில்லியர்ஸை லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது அணி ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. ஷாகித் அப்ரிடியையும் 6-வது அணி ஏலம் எடுத்துள்ளது.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #CA #Smith #Warner
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு மார்ச் 29-ந்தேதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கிறது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29-ந்தேதியுடன் முடிகிறது.

    இந்த தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறது. இதனால் ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர். பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. தடை அதே நிலையில் இருக்கும் என்று கூறி வீரர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் மீதான தடையை நீக்கக்கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

    இதுகுறித்து இந்த வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூவரின் தடைக்காலத்தை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் உள்ளூர் தொடரின் கடைசி ஆட்டத்தில் விளையாட முடியும் என்று கிரிக்கெட் நிருபர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

    அதற்கு முனன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பதில் ட்வீட் செய்திரந்தார். அதில் ‘‘மூன்று வீரர்கள் தடை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தண்டனை குறைக்கப்படும் என்ற செய்தி முன்னோக்கிச் சென்றால், பான்கிராப்ட் தண்டைனை குறைக்கப்படும் அளவிற்கு ஸ்மித் மற்றும் வார்னரின் தண்டனை குறைக்கப்படலாம். மூன்று பேரும் அவர்களுடையை தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். அதை எதிர்த்து முறையீடு செய்யவிலலை. ஆகவே, தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.


    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் தடையை விலக்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த வாரம் இறுதி முடிவை எடுக்கிறது. #CA #Warner #Smith
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கமும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து. ஓராண்டு தண்டனையை பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.



    டிசம்பர் 6-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதன்முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிடம் தொடரை இழந்தால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தண்டனை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் மூன்று பேரின் தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஸ்மித் மற்றும் வார்னருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்திய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தை போன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இருக்காது. ஆனால் பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கும்.

    இதனால் முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீச, வீடியோக்களை பார்த்து தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.



    ஆஸ்திரேலியா தொடர் குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சுக்குழு இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஏராளமான வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிரணி மிகவும் வலுவாக உள்ளதால், முடிந்த வகையில் தொடர் முழுவதும் கவனம் செலுத்துவதுதான் திட்டம். சரியான லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் துல்லியமாக பந்து வீச முயற்சி செய்வோம்.

    எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். வெற்றி அல்லது தோல்வி அதிர்ஷ்டத்தை சார்ந்தது. 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவோம். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி உண்மையிலேயே பலவீனமான அணியாகத்தான் இருக்கும். ஆனால், நம்முடைய திட்டத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.
    வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். #stevesmith #davidwarner
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    அப்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது டெலிவி‌ஷன் கேமராவில் தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

    இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ்சுமித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து வார்னர், சுமித்துக்கு தலா 1 ஆண்டும், பேன்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது.

    வீரர்கள் மீதான நடவடிக்கை கடுமையானது என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

    இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சை குழுவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சாடியிருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் டேவிட் பீவர், தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர் லேண்ட், இயக்குனர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ஏற்கனவே ராஜினாமா செய்து இருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அணியின் செயல்திறன் தலைவர் ஹோவர்ட், ஒளிபரப்பு இயக்குனர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகினர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கெவின் ராபர்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் மற்றும் வீரர்கள் சங்கம் தடையை நீக்க தொடர்ந்து வலியுறுத்தியது.

    இந்த நிலையில் வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வார்னர், சுமித் மீதான தடையை நீக்க வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலனை செய்யப்படும். வீரர்களின் உணர்வு மதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மோசமாக தோற்றது. இதனால் வார்னர், சுமித் ஆகியோரது பணி ஆஸ்திரேலியாவுக்கு தேவையாக இருக்கிறது.

    இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வருகிற 21-ந் ளேததி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. #stevesmith #davidwarner
    பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

    இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

    உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தேசிய அணிக்கு திரும்புவதற்கு பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். #Smith
    ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டும், பான் கிராப்ட்டிற்கு 9 மாதமும் தடை விதித்துள்ளது.

    இந்த தடை முடிந்த பின்னர் மூன்று பேரும் எளிதாக மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே வருகிறது.

    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் முதுகெலும்பாக திகழ்வதால் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.



    இந்நிலையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் தடைக்காலம் முடிந்து மீண்டும் தேசிய அணிக்கு ஏன் திரும்ப முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதனால் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    ஆடுகளத்தில் மூர்க்கத்தனமாக செயல்படும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக அனுதாபம் என்ற பேச்சுக்கு இடமில்லை என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவர் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது, அந்த அணி வீரர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இதற்கிடையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விமர்சித்தாலும் சிலர் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக்கூடாது என்று அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.



    கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடும்போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். அது என்னை முதன்முறையாக தாக்கியது. 2015 ஆஷஸ் தொடரிலும் மோசமாக நடந்து கொண்டார்கள்.

    தவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்றார்.
    ×