search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cameron Bancroft"

    கேப் டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைக்கேப்டனாக இருந்த வார்னர் என்னைத் தூண்டினார் என கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். #BallTampering
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைக் கேப்டன் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

    இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

    இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

    சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
    பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி 9 மாதம் தடைபெற்ற ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
    ஆஸ்திரேலியா கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப்டவுனில் நடைபெற்ற போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு 9 மாதம் தடைவிதித்துள்ளது.



    இந்த தடை டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி மாதம் முதல் அவர் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம். இந்நிலையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் துர்காம் அணியுடன் பான்கிராப்ட் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் 2019 சீசனில் துர்காம் அணிக்காக விளையாட இருக்கிறார்.

    பான்கிராப்ட் ஆஸ்திரேலயாவின் தேசிய அணிக்காக 8 டெஸ்ட், ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் இந்த வேலையை செய்வதற்கு வார்னர்தான் முக்கிய காரணம் என்பதும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்பதும் வெட்ட வெளிச்சமானது.

    இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்டிற்கு 9 மாதமும் தடைவிதிக்கப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடரிலும், உள்ளூர் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதம் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள். ஜூலை 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை டார்வினில் நான்கு அணிகள் பங்கேற்கும் என்டி ஸ்டிரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா 8 டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.



    இதில் வார்னர் 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பான்கிராப்ட் தொடர் முழுவதும் விளையாடுகிறார்.

    ஸ்மித் ஜூன் 28-ந்தேதியில் இருந்து ஜூலை 15-ந்தேதி வரை நடைபெறும் குளோபல் டி20 கனடா தொடரில் விளையாட இருக்கிறார். இந்தகான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் வார்னர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
    ×