search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver"

    • இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • காவல்காரர் ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டையில் ஏற்கனவே இரண்டுமுறை திருடுபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்றாவது முறையாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் (70) வடக்கு நாட்டாணி க்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடிக்கடி மகளை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றுவி டுவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிரு ந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து வெ ங்ட்ரா மன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார்.

    வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெ ங்களூர் சென்றுவிட்டார். காவல்காரர் ஒருவர்பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வை யிட்டு செல்வதுவழக்கம். இந்நிலை யில் ஞாயிற்று க்கிழமை அதிகாலை, பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள், சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது, அதிகாலை 2:20 மணிக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூ ரில் இருந்த அவர் நாட்டா ணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்திறந்து கிடந்த வீட்டை பார்வையி ட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.பேராவூரணி காவல்நிலை யத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு ரோந்து பணிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

    எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

    உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார். #SwapnaBarman
    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சிம்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். #YouthOlympics #IndianWrestlerSimran
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. தகுதிச்சுற்றுகளில் எளிதில் முன்னேறி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரன், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் எமிலி ஷில்சனிடம் தோல்வியடைந்தார்.



    துவக்கத்தில் சற்று முன்னிலை வகித்த சிம்ரன், அதன்பின்னர் 6-11 என்ற நிலையில் பின்தங்கி தோல்வியை சந்தித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளது. #YouthOlympics #IndianWrestlerSimran
    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் குர்னிஹால் சிங் வெண்கலப்பதக்கத்தை வென்றார். #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

    இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

    செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது.  #JuniorShooter #India ##ISSFWCH
    ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    போபால்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்த அணியில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் பங்கு பெற்று இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்த அணியில் இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
    ஜகார்த்தா:


    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தைப் பிரிவுகளுக்கான இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி, தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள்பெற்றதால் போட்டி டை ஆனது. இதையடுத்து ஷூட் ஆப் முறையில் இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கொரிய அணி, வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சவுகான் ரஜத், சைனி அமான், வர்மா அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



    இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. #AsianGames2018 #IndianArcheryWomen
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி  228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



    இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryWomen
    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் சோத்தாராம்(வயது 47). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் சோத்தாராம் கடையை திறந்தார். அப்போது அங்கு வலதுபுற சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு கடையை ஒட்டியுள்ள டீக்கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கணேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், தனது கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் டீக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, சுவரில் துளையிட்டு அருகிலுள்ள அடகு கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடனே எமரால்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், சுவரில் துளையிட்டு கடைக்குள் நுழைவதும், கண்காணிப்பு கேமராவை சுவரை நோக்கி திருப்பி வைத்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் மில்டன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஜாரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×