search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk Sarees"

    • இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • காவல்காரர் ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டையில் ஏற்கனவே இரண்டுமுறை திருடுபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்றாவது முறையாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் (70) வடக்கு நாட்டாணி க்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடிக்கடி மகளை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றுவி டுவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிரு ந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து வெ ங்ட்ரா மன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார்.

    வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெ ங்களூர் சென்றுவிட்டார். காவல்காரர் ஒருவர்பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வை யிட்டு செல்வதுவழக்கம். இந்நிலை யில் ஞாயிற்று க்கிழமை அதிகாலை, பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள், சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது, அதிகாலை 2:20 மணிக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூ ரில் இருந்த அவர் நாட்டா ணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்திறந்து கிடந்த வீட்டை பார்வையி ட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.பேராவூரணி காவல்நிலை யத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு ரோந்து பணிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

    எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    ×