search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Dress"

    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.
    அரசனுக்கு ஒரு ஆடை, பணக்காரனுக்கு ஒரு ஆடை, ஏழைக்கு ஒரு ஆடை என்று விதவிதமாக பரிணமித்தது ஆடையின் வடிவங்கள். நம் முன்னோர்களில் ஆண்கள் வேட்டி, சட்டையும், இளம் பெண்கள் பாவாடை, தாவணியும், திருமணமான பெண்கள் சேலையையும் அணிந்தனர்.

    ஆனால் காலசுழற்சியில் இன்று ரகங்கள் வீதம் விதவிதமான ஆடைகள் அணிவகுத்து நிற்கின்றன. ஆடை என்பது மானத்தை மறைக்க என்ற நிலைமாறி இன்று பலரது பார்வையையும் நம்பக்கம் திருப்ப என்ற நிலைக்கு வந்திருக்கிறது. நாம் உடுத்தும் ஆடைகளில் புதுமை இருந்தால் பலரும் நம்மை உற்றுநோக்குவார்கள் என்ற மனநிலை பலரது மனதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஆடை ஒருவரை அழகுபடுத்துவதில் தவறில்லை. அதற்காகத்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்றனர் நம்முன்னோர்கள். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அணியும் ஆடை ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் பலரும் முழுக்கால் சட்டை (பேன்ட்) இடுப்பை விட்டு கீழே இறங்கி இருப்பது போலவும், அதற்குள் அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரிவது போலவும் உடை அணியும் நிலை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சிலர் சட்டை அணிந்தால் 3 பொத்தான்களுக்கு கீழே உள்ள பொத்தான்களை மட்டுமே அணிந்து கொள்ளும் நிலையும் உள்ளது. ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.

    அதேபோல சில பெண்களும் உடல் அழகை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஆடைகளை நாகரிகத்தின் சின்னம் என்று கூறி அணிந்து கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆபாசமாக உடை அணிகிறீர்கள் என்று கேட்டால் எங்கள் உடையில் எந்த தவறும் இல்லை. பார்ப்பவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது என்று பதிலளிக்கிறார்கள். ‘உடலழகை ஊருமெச்ச காட்டக்கூடாது’ என்ற சினிமா பாடல் வரிகள் சிந்திக்க தக்கது. அதுமட்டுமா ஆண்களும், பெண்களும் தேவையற்ற வாசகங்களை கொண்ட பனியன்களை ஆர்வமுடன் வாங்கி அணிகிறார்கள்.

    நான் தனிமையில் இருக்கிறேன், இந்த இடம் பார்ப்பதற்கு மட்டுமே, என் இதயவாசல் திறந்து இருக்கிறது, என்பது போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்கலாம். வாசகங்கள் இருப்பது தவறல்ல. அது வாழ்க்கைக்கு உதவும் வாசகமாகவோ, தத்துவத்தை தெரிவிக்கும் வாசகமாகவோ, பிறருக்கு பயன்படும் வாசகமாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். தத்துவஞானிகளின் வரிகள், திருக்குறள் வரிகள், பொன்மொழிகள் போன்றவற்றை எழுதிய பனியன்களை அணியலாம்.

    ஆடை என்பது மானத்தை காக்க என்ற நிலைமாறி அடையாளத்துக்கானதாக மாறியது. அதன்பின்னர் அலங்காரத்திற்கானது என்ற நிலையில் இருந்து இன்று உடல்அழகை வெளிக்காட்டுவதற்கானது என்ற நிலையில் வந்து நிற்கிறது. இதனால் ஆடை தனது அடையாளத்தை இழந்து விட்டது.

    ஆடை ஒவ்வொருவருக்கும் தனி அடையாளமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தலைவர்கள், அரசர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள், டாக்டர்கள், போலீஸ் என பல்துறையில் பயணிப்பவர்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துவது அவர்கள் உடுத்தும் ஆடைகள்தான். நாம் தேர்ந்தெடுத்து அணியும் ஆடை நம்மை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டும் சான்றாக இருக்க வேண்டும். ஆடைகளை அணிவதில் அனைவரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆடை ஒவ்வொருவரின் தனித்தன்மையையும், தனி அடையாளத்தையும் வெளிக்காட்ட வேண்டும். அதாவது முழு மனிதனாக அடையாளம் காட்ட நாம் அணியும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்காத அளவுக்கு இருக்க வேண்டும். ஆடையின் அடையாளம் மனிதன் அல்ல. மனிதர்களின் அடையாளம் தான் ஆடை.

    -எஸ்.முத்துக்குட்டி, அகஸ்தீஸ்வரம்

    மென்மை தன்மை கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.
    நாம் அணிகின்ற எந்தவித துணியிலான ஆடைகளும் உடலில் படும்போது ஏதேனும் ஒர் உரசலை, உறுத்தலை தரவே செய்யும். ஏனெனில் அந்த துணி நெய்யும் நூல் இழைகளில் உள்ள கட்டமைப்பே காரணமாக அமைகின்றது. குறிப்பாக செயற்கை இழை ஆடைகள் என்பவை உடலில் படும்போது அதிக தொந்தரவுகளையும், கோடை காலத்தில் அதிக எரிச்சலையும் தரும். அதனை போக்கும் விதமாக புதிய வழவழப்பும், மென்மை தன்மையும் கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.

    நூறு சதவீதம் இயற்கை இழை

    புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துணி என்பது முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுயிட் பேஷன் என்றவாறு திரவ நிலையின் வளைவுகள், மென்மை தன்மை கொண்ட துணியமைப்பாக உள்ளது. எங்கும் எப்போதும் அணிய கச்சிதமான, மென்மையான சுற்று சூழலுக்கு பாதிப்பு உண்டாகாத, நூறு சதவீதம் இயற்கை முறையில் இந்த துணியமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதனை அணியும் போது அதிக சுதந்திரத்தன்மை ஏற்படுவதுடன் நல்ல காற்றோட்டமான உணர்வையும் தருகிறது. ஆடை அணியும் போது மற்ற துணிகளை போல் கனமாக தெரியாமல் எடைகுறைவான துணியமைப்பாகவே தோற்றமளிக்கும். எனவே இந்த வகையில் நெய்யப்படும் ஆடை அணியும் போது ஆடையை சுமக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பே ஏற்படாது. கோடைகாலம், குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் அணிய ஏற்ற வகையில் உள்ளது.

    மனிதனால் உருவான இயற்கை நூலிழை

    இந்த புதிய துணிவகை என்பது முற்றிலும் மரக்கூழ் கொண்டு இயற்கையான நூலிழையாக செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறது. அதாவது இயற்கையாகவே மறுசுழற்சி வளத்தை மேம்படுத்தும் வகையிலான மரக்கூழ் மூலம் இதன் உருவாக்கம் உள்ளது. இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மரங்கள் என்பவை எவ்வளவு மரம் வெட்டப்படுகிறதோ அதனை விட அதிக மரங்கள் உடனேயே நடப்படுகின்றன.



    இந்த வகை மரக்கூழ் நூலிழை தயாரிப்பின் முறை பருத்தி மூலம் நூலிழை தயாரிப்பைவிட புவி பாதுகாப்பு நிகழ்வு அதிகமாக பேனப்படுகிறது. ஆம் பருத்தியை விட ஆறு (அ) ஏழு மடங்கு குறைந்த நிலப்பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. அத்துடன் பருத்தி வளர பயன்படும் நீரின் அளவை விட குறைவான நீரே இம்மரவளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் வளங்களை மேமம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பு முதல் நூலிலை தயாரிப்பு வரை அனைத்தும் புவி பாதுகாப்பு அம்சம் நிறைந்தவையாகவே உள்ளது.

    புதிய ஆடைகள் தயாரிப்பில் இயற்கை நூலிழை

    பலதரப்பட்ட ஆடைகள் தயாரிப்புக்கு என இந்த புதிய பிராண்ட் இயற்கை நூலிழை பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச அளவில் புது ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இப்புதிய நூலிழை கொண்டு ஆண், பெண் என இருபாலர் ஆடைகள் தயாரித்து வழங்குகின்றனர். இயற்கையான செல்லுலாஸ் நூலிழை என்பது அதிக மென்மை தன்மையுடன் ஒர் புதிய பரவச அனுபவத்தை தருகிறது என்பதால் பலரும் இதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர்.

    இந்த நூலிழை ஆடைகள் என்பதன் மேற்புற தோற்ற அமைப்பு அதிக பளபளப்பும், மென்மை தன்மையும் கொண்டதாக உள்ளது. எனவே இதில் நெய்யப்படும் ஆடைகள் அதிக பொலிவு மற்றும் அதிகபட்ச அழகு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. நமது சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட இயற்கை நூலிழை ஆடைகள் பயன்படுத்திய பிறகும் பூமிக்கு பாரமாக அமையாத வகையில் உள்ளது.

    புதிய ப்ளுயிட் பேஷன் என்ற வகையில் அறிமுகமான இந்த வகை ஆடைகள் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஆடைகளாக உள்ளது. பெண்களின் தோற்ற பொலிவை, கச்சிதமான உருவ அமைப்பை வெளிப்படுத்தும் ஆடை என்பதுடன் அவர்களின் மென்மை தன்மையை வெளிப்படுத்தும் ஆடையாகவும், இயற்கை நூலிழை ஆடைகள் உலா வருகின்றன.
    தீபாவளிக்கு பெண்களுக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.
    தீபாவளி என்றாலே பெண்களுக்கு என பிரத்யேக ஆடைகள் வெவ்வேறு வேலைப்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெண்களின் ஆர்வத்தை தூண்டும் என ஆடைகளை உருவாக்கவே தனிப்பட்ட வடிவமைப்பாளர்கள் கூடுதல் மெனக்கெட்டு வடிவமைக்கின்றனர். அதன் காரணமாக புதிய ஆடைகள் வெளிவரும்போதே அதற்குரிய சிறப்பிடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.

    அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது முழு நீள உடையாகும். இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபையா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த சல்வார் காமீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அபையா ஆடை என்பது அணிபவரின் முழு உடல் பகுதியை மூடும் அமைப்பில் கை மற்றும் கால்பகுதி மட்டும் தெரியும் வகையில் உள்ள ஆடை. அதிக வெட்டுதல்கள் இன்றி முழு துணி அமைப்பை தான் மாறுபட்ட வகையில் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றியுள்ளனர்.

    தரையில் புரளும் ஆடையின் அமைப்பு இந்திய பெண்கள் அணியும் வகையிலான வடிவில் அதிக வேலைப்பாடு மற்றும் திறன்மிகு கலையம்ச மேம்பாட்டுடன் உருவாகி உள்ளது. பார்த்தவுடன் விரும்பும் வகையில் அபையா ஆடைகள் வண்ண பொலிவும், துணிகளின் நேர்த்தியும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    அபையா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:


    அபையா ஸ்டைல் சுடிதார் என்பது பல்வேறு விதமான துணிரகங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்கென பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல பிரிவுகள் உள்ளவாறு அதாவது திருமணம், பார்ட்டி, விழா, பண்டிகை என்பதுடன் முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்கு அணிய ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் உருவாக்கப்படுகிறது.

    சாதாரணமாகவே அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது அதிகபட்ச வேலைப்பாட்டுடன்தான் உருவாக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட ஓவிய வேலைப்பாடு என்பது பார்டர், ஸ்லீவ் மற்றும் கழுத்து பகுதிகள் அனைத்திலும் அதிக சிறப்பு தன்மையுடன் நெய்யப்பட்டுள்ளது. அதாவது பாரம்பரிய எம்ப்ராய்டரி கைவினைகளைஞர்கள் கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதி உண்மையான கலையம்ச பணிகள் தனிநேர்த்தியுடன் செய்யப்படுகின்றது.

    ஆச்சர்யமூட்டும் சில வடிவமைப்புகள்

    அனார்கலியோடு ஒப்பிட்டு குழம்ப கூடாது என்பதற்கு இதில் மாறுபட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் முழு கை அமைப்பு என்பது ஒரு சில மாடல்களில் மட்டுமே இருக்கும். மற்றதில் பிற வகை கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் கழுத்து பகுதி பல வித மாடல்களில் திறம்பட வளைவுகளுடன் தைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்த வகையில் உள்பகுதி லேயர்கள் மெல்லிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எம்ப்ராய்டரி ஜாக்கெட் அபையா சூட்ஸ்

    ஒற்றை வண்ண பின்னணியில் தங்க நிற கம்பிகள் பின்னப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் ஜாக்கெட் அபையா ஸ்டைல் சூட்ஸ் வருகின்றன. முழு உடையில் மார்பு பகுதி, கைப்பகுதி மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அடுத்தடுத்தான எம்ப்ராய்டரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேவி ப்ளு, மெரூன், பிங்க், சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இந்த எம்ப்ராய்டரி ஜொலிக்கின்றது. ஆடையின் மார்பு பகுதி ஜொலிக்கும் கவசம் போன்ற அமைப்புடன் பின்னல் செய்யப்பட்டும் அதன் கீழ் பகுதி மலர்கள் உள்ளவாறும் நெய்யப்படுகிறது. கொடிகள், இலைகள் உள்ளவாறும், ஆடையின் கீழ்பகுதி டிரில் அமைப்பில் அடுத்தடுத்தான தோரண அமைப்பு உள்ளவாறு கூடுதல் தரத்துடன் எம்ப்ராய்டரி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெட் துணியில் அபையா சூட்ஸ்

    பாலி ஷன்டூன் லைனிங் அமைப்பு என்பது நூல் மற்றும் ஜரிகையில் நெய்யப்பட்டவாறு மேல் கோட் அமைப்புடன் உள்ளது. இதில் மேற்படி அழகை கூடுதல் மேம்படுத்தும் வகையில் நெட் துணியில் துப்பட்டா மற்றும் மேல்சட்டை அமைப்பு கொண்டவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் காலர் அமைப்புடன் மெல்லிய துணியின் மேற்பகுதி, உட்புறபகுதி பாலி ஷன்டூன் துணி அமைப்பு மெல்லிய எடை குறைந்த ஆடைக்கு உத்தரவாதம் தருகிறது. ராயல் கவுன் அமைப்பில் கம்பீர நடையுடன் பவனி வரச்செய்யும் இந்த அபையா ஸ்டைல் ஆடைகள் புதிய திரைப்படங்களில் கதாநாயகிகளின் முக்கிய ஆடையாக உலா வருகிறது. கூடிய விரைவில் அழகிய பெண்களின் அட்டகாசமான ஆடையாக வீதிகளில் அணிந்து செல்லும்போது கண்டு வியந்திடவே செய்வர். 
    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும்.
    பெண்கள் தினமும் காலையில் கண்விழித்து கண்ணாடி முன்பு நின்று தங்கள் அழகை பார்க்கும்போது, அவர்களுக்கு பளிச்சென்று தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகள்தான் தெரியவரும். அதிக உடல் எடை கொண்டவர்கள் சற்று வருத்தத்தோடு ‘இன்னும் கொஞ்சம் உடல் மெலிந்தால் அழகாக இருக்கும்’ என்று நினைப்பார்கள். அளவுக்கு அதிகமாக உடல்மெலிந்து காணப்படுகிறவர்கள், ‘சற்று உடல் பூசிமெழுகியது போன்றிருந்தால் அதிக அழகு கிடைக்குமே..’ என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வார்கள். தங்கள் உயரத்தை குறித்தும், சரும நிறத்தை குறித்தும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தினமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம்.

    இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகளே தெரியாத அளவுக்கு அவர்களை ஆடை வடிவமைப்பு மூலம் அழகில் மெரு கேற்றிகாட்டுகிறார்கள், பேஷன் டிசைனர்கள்.

    “பெண்கள் பண்டிகைகள், விழாக்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய நாட்கள் போன்ற எல்லாவற்றுக்கும் புதிய ஆடைகள் வாங்கி, அதை உடுத்திதான் கொண்டாட விரும்புகிறார்கள். திருமணம் என்றால் சொல்லவேண்டியதில்லை. அப்போது விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எல்லோரையும் கவர விரும்புகிறார்கள்.

    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண் களின் உடல் அமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்புக்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்கு கீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல்வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல் பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். செவ்வக வடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள்தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள்.

    இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.

    “பேஷன் என்பது ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்று சொல்வார்களே அது போன்றதுதான். பெயர் மாறும், அதன் தோற்றத்திலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். அடிப்படையை ஆராய்ந்தால் அது ஆதிகாலத்தில் இருந்தே சற்று மாறி மாறி வந்ததாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் நடிகைகள் பானுமதியும், சரோஜாதேவியும் சினிமாவுக்காக அணிந்த லெஹங்கா இப்போது கூடுதல் அழகுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன் சோளிக்கு இப்போது கிராப்டாப் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எல்லா வயதினரும், எல்லா சூழலுக்கும் அணிந்துகொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்படுகிறது.

    மணப் பெண்கள் லெஹங்காவை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதல் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் சேர்க்கப்படும்போது, அதிக எடை இருப்பது போல் தோன்றினாலும், மூன்று கிலோவுக்கு மேல் ஆகாது. அதனால் இது கனமாக இருக்கும் என்று கருதவேண்டியதில்லை.

    தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது.வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக் கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

    துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடினமான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்துகொண்டிருக்கும்போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்துவிடுகிறார்கள். சேர்த்து அணிந்துகொள்ளும்போது தைத்திருப்பதுபோல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும்.

    எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

    விலை உயர்ந்த புடவைகள்தான் கூடுதல் அழகுதரும் என்ற கருத்து இப்போது வலுவிழந்துவிட்டது. சராசரியான விலையிலே புடவை வாங்கி, அதில் தேவையான இணைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் அழகாக்கிக்கொள்ளலாம். புடவைகளில் பிராணிகளின் உருவங்களை பிரிண்ட் செய்துகொள்வது இப்போது புதிய பேஷனாக இருக்கிறது. பகல்பூர் சில்க் அதற்கு ஏற்றது. அதில் யானை, மான், வாத்து போன்றவைகளை பிரிண்ட் செய்து அழகுபடுத்தலாம். யானை உருவம் பொறித்த புடவைகள் நடுத்தர வயது பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு நகைகள். வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு அல்லது ரூபி பதிக்கப்பட்ட நகைகள். நவரத்தினங்களில் ஒன்றான ரூபி அல்லது கெம்பு கல் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உலோகங்களில் பதிக்கக்கூடியவை. மேலும் இக்கல் வைரம், பச்சைக்கல், முத்து போன்றவற்றுடன் இணைத்து பதிக்கவும் ஏற்றதாகும்.

    கெம்பு கற்கள் பின்க், பர்ப்புள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றாலும் பொதுவாக கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. இது கொரண்டம் (அலுமினியம் ஆக்சைட்) என்ற தாதுவின் ஒரு வகையாகும். இந்த தாதுவில் உள்ள கிரோமியம் என்ற வேதிப்பொருளினால் சிவப்பு நிறம் இந்த கற்களுக்கு கிடைக்கிறது.

    கெம்பு கற்களில் மியான்மார் அல்லது பர்மாவில் கிடைக்கும் கற்களுக்கு விலை அதிகம் இருக்கிறது. பொதுவாக ஒரு கேரட் எடையுள்ள கற்களுக்கு 7 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையில் அதன் நிறம், எடை, அளவு, சுத்தம் மற்றும் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல. மிகவும் மெல்லிய வகை நகைகளை விட சற்று எடை கூடுதலான நகைகளில் கெம்பு அருமையாக இருக்கும். டெம்பிள் ஜூவல்லரி நகைகளிலும், ஜிமிக்கி போன்ற பிரதான நகைகளிலும் பதிக்கப்படும்போது கெம்பு கற்கள் மிக நேர்த்தியாகவும், எடுப்பாகவும் இருக்கும். பொதுவாக பச்சை மற்றும் நீல நிற கற்கள் சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு அதிக எடுப்பாக இருக்கும். ஆனால் கெம்பு கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற கற்கள் கொண்ட நகைகள் மாநிறம் மற்றும் கருத்த நிறம் உள்ள பெண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

    கெம்பு கற்கள், பச்சை நிற கற்கள், முத்து போன்றவற்றுடன் சேர்த்தும் பதிக்கப்படுகிறது. கெம்பும், முத்தும் பதித்த ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற நகைகள் செட்டாக அணியும்போது மிக நேர்த்தியாகவும், அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.

    இன்று பல நகைக்கடைகளில் மணமகளுக்கு திருமண நகைகளாக முழு கெம்பு செட் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், தொங்கட்டான் அல்லது ஜிமிக்கி, வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம், மாங்காய் மாலை போன்ற மாலைகள், ஒட்டியானம், நெத்திச்சுட்டி, டாலர் என்று ‘ப்ரைடல் ரூபி செட்’ நகைகள் கிடைக்கின்றன. பழமையும், புதுமையும் கலந்து நகைகள் அணிய விரும்பும் இளம் பெண்களுக்கும் பல புதுமையான டிசைன்களில் கெம்பு பதித்த நகைகள் அருமையான தேர்வாக இருக்கும். 
    பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.
    இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

    ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

    இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

    இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.



    இயற்கை முறையில் சாயமேற்றுதல்

    இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

    கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

    கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.
    பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர்.
    விழா காலங்களில் தொடர்ச்சியாக வருகின்ற காரணங்களால் ஆடை வடிவமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் புதிய புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை சந்தையில் விற்பனைக்கு தருகின்றனர். பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. அதுபோல் திருமண நிகழ்வுகளுக்கும் லெஹன்கா சோலி விரும்பி அணிகின்ற ஆடையாகவே உள்ளது.

    லெஹன்கா சோலி என்பது உடனுக்குடன் அணிந்து கொள்ளவும், வேறு உடைக்கு மாறும்போது சுலபமாக கழட்டி மாற்றி கொள்ளவும் முடியும். அதுபோல் பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். அதுபோல் லெஹன்கா என்பது சிலகாலம் வரை வைத்திருந்து அணியக்கூடிய வகையில் இருக்கும்.

    உடனே சிறியதாக மாற்றம் அடையாது. அதுபோல் உடல் அளவில் ஏதும் மாற்றம் ஏற்பட்டாலும் சிறு மாற்றம் செய்து அணிய வசதியான ஆடையாகவும் உள்ளது. தற்போது லெஹன்கா சோலி என்பதில் கீழ் பகுதி பேண்ட் என்றவாறு பலோசா மற்றும் ஷராரா பேண்ட் போன்றவை வந்துள்ளன. இது புதிய லெஹன்கா ஆடை வகையாக மாற்றம் பெற்றுள்ளன. லெஹன்கா சிறப்பிடம் பெறுவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கவே செய்கின்றன.

    லெஹன்கா சிறப்பு மிக்க துணி வகைகள்


    லெஹன்கா என்பது பெரும்பாலும் அதிக எம்பிராய்டரி மற்றும் மேல் வேலைப்பாடுகளுடன்தான் காணப்படும். இந்த சீசனில் அதில் சற்று மாறுபட்டு கனமான அதிக உயர்தர தையல்களுடன் கண்கவரும் வகையில் உயர்ரக துணிகளான பராகோட், பனாரஸி பட்டு, காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற தாய பட்டு துணிகளுடன் உருவாக்கப்படுகின்றன. அதிக எம்பிராய்டரி இல்லாமல் உயர்ரக பட்டு துணி என்பதில் மைசூர் பட்டு மற்றும் பனாரஸி பட்டு துணி லெஹன்கா அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன. சாதாரணமாக அணியக்கூடிய வகையில் பட்டு துணி லெஹன்கா இருப்பதுடன் அதிக விலையின்றியும் கிடைக்கின்றது.

    கோப்பு படம்

    மேற்புற ஓவிய வேலைப்பாடுகள்

    ஓவியம் சார்ந்த (அ) கலைநயம் சார்ந்த பிரிண்ட் செய்யப்பட்டவை அதிகமாக உள்ளன. அதாவது அழகிய ஓவியங்கள், மார்டன் ஆர்ட், முரலி மற்றும் பாரம்பரிய ஓவியக் கலைகளான ஆஸ்டெக் மற்றும் மெரேக்கான் ஓவியப்பாணியிலான வடிவங்கள் அழகுற துணிகளின் மீது பி ரிண்ட் செய்யப்படுவதால் அவை ஆடம்பர வடிவமைப்பை தருகின்றன. இந்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியின் ஓரப்பகுதியில் பிரம்மாண்ட அளவில் நெய்யப்படும் சில லெஹன்காகள் வருகின்றது. எம்பிராய்டரி செய்யப்பட்டு அதிக கனமான லெஹன்கா போலன்றி எடை குறைந்த இந்த லெஹன்கா அணிவதற்கு இலகுவாக உள்ளது.

    பூ வேலைப்பாடு லெஹன்கா

    லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

    பெரிய ஜாக்கெட் அமைப்புடன் கூடிய லெஹன்கா

    லெஹன்கா ஜாக்கெட் அமைப்பு என்பது இடுப்பு வரை மட்டுமே இருக்கும். புதிய ஜாக்கெட் என்பது முழு அளவு அதாவது இடுப்பிற்கு கீழ் பகுதி வரை இறங்கியவாறும், முழுக்கை அமைப்புடன் பிரம்மாண்ட ஆடை வடிவமைப்புடன் இருக்கின்றன. இந்த ஜாக்கெட் என்பது அதிக வேலைப்பாட்டுடன் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி பிளைன் லெஹன்கா என்றவாறும் சில வருகின்றன. அதாவது ஓரப்பகுதியில் மட்டும் பட்டையான லேஸ் வைக்கப்பட்டு உடல் பகுதி ஏதும் பிரிண்ட் செய்யப்படாது பிளைன்-ஆக உள்ள லெஹன்காவும் சற்று வித்தியாசமாக காட்சி தருகின்றது. லெஹன்கா சோலி தன் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டை குறைத்து கொண்டு பிரிண்டட் லெஹன்கா சோலிகளாக உலா வருகின்றன. 
    பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
    இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

    இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

    தோத்தி சல்வார்:-
    பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

    பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

    பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.



    ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

    பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

    ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம்.
    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம். கொஞ்சம் ஒல்லி பெல்லி, அழகிய கால்கள் இருக்கும் பெண் என்றால் யோசிக்காமல் மினி ஸ்கர்ட்டை தேர்வு செய்யலாம்.

    காலம் தாண்டி  மறையாமல் நிற்கும் ஃபேஷன் ட்ரெண்ட்களில் இந்த மினி ஸ்கர்ட்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமக்கு பொருத்தமான  டாப்களுடன் மேட்ச் செய்து கொண்டால் ஹாட் குயினாக போஸ் கொடுக்கலாம்.

    காக்டெயில் பார்ட்டி, பகல் நேர கொண்டாட்டங்கள் என எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய வகையிலானது தான் இந்த கிரேப் மினி ஸ்கர்ட்.

    எம்பிராய்டரி ஜாக்குவர்டு ஸ்கர்ட்

    ஸ்கர்ட் முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்குவர்டு ஸ்கர்ட் பெண்களுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கும். அதேசமயம் இந்த எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்கர்ட்டுகளைத் தங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.



    ரைப்டு மினி ஸ்கர்ட்

    இந்த ஸ்கர்ட் அணிந்தவுடன் நீங்கள் உங்களுடைய பள்ளிப் பருவத்துக்கே சென்றவிட்டது போல் தோன்றும். இந்த ஸ்கர்ட்டுக்குப் பொருத்தமாக கூல் கிராபிக் டி-சர்ட்டுகளை அணியலாம்.

    ஏ - லைன் ஸ்கர்ட்

    இந்த ஏ - லைன் ஸ்கர்ட்டுகள் 1970 களில் மிக பிரபலமாக இருந்தன. அவை இப்போது மீண்டும் ஃபேஷன் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளன.

    ஸ்டிரைப்டு ஸ்கர்ட்


    செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமான கோடுகள் கொண்ட மினி ஸ்கர்ட்டுகள் மிகச் சிறந்த சாய்ஸ். இந்த ஸ்டைல் பார்ப்பவர்களை உடனே உங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும்.
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் பெண்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் தான்
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்…

    ப்யூர் காட்டன் :

    மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.

    போச்சம்பள்ளி :

    காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.

    பூம்காய் சேலை :

    இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள்.



    இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.

    டண்ட் சேலை :

    பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காதி சேலை:

    கைத்தறி சேலைகளான இதனை ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டனில் விரைப்பான லுக் கொடுப்பதால் பார்ட்டிகளுக்கு அணிந்து சென்றால் தனியாக தெரிந்திடும். அதே போல இதில் பெரிய கண்களை உறுத்தும் டிசைன்கள் இருக்காது.

    தாக்ககை சேலை :

    பங்கலாதேஷில் உள்ள தாக்காவிலிருந்து வருகின்ற சேலை இது. இங்கிருந்தே ப்ளைன் த்ரட் வொர்க் கொண்ட சேலைகளும் வருகிறது. தங்க நிறத்தில் ஜரிகை வேலைகள் நிரம்பியிருக்கும் அந்த சேலையை ஜம்தனி தாக்கை என்றும் அழைக்கப்படும். டிசைனர் சேலைக்கான லுக் இதில் கிடைத்திடும்.

    பசப்பள்ளி சேலை :

    ஒடிசாவின் கைத்தறி சேலை வகை இது. இதில் பெரும்பாலும், செக்டு பேட்டர்ன் தான் வரும். இந்த டிசைனில் ஒரு சேலை தயாரிக்கு ஒரு மாதம் வரை ஆகும் மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இதன் எலகண்ட் லுக்கிற்கு தாரளமாக கொடுக்கலாம்.
    அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.
    துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிக்கு மத்தியில் உள்ள சிறு நகரமே கத்வால். இந்நகரம் கைத்தறி நெசவுக்கு மிகவும் பிரபலமானது. அதாவது கத்வால் பட்டு சேலை என்றாலே அதன் புகழ் அறிய வரும். கத்வால் சேலைகள் அழகிய சரிகை வேலைப்பாடு, நன்கு நெய்யப்பட்டு குட்டு பார்டர்கள் என்பது எடை குறைந்தவாறு சுலபமாக பராமரிக்க கூடிய வேலையாகவும் விளங்குகிறது. அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.

    கத்வால் சேலையை நெய்பவர்கள் என்பவர் இந்து தெய்வங்களுக்கு நெசவு செய்து தந்த ஜிவேஷ்ஹர் மகராஜ் வழி வந்தவர்களாம். இச்சேலை என்பது பெரும்பாலும் பண்டிகை மற்றும் விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்த ஏற்ற சேலையாக நெய்யப்பட்டன. அதாவது இறையம்சம் பொருந்திய சேலையாகவே கத்வால் சேலைகள் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட கத்வால் சென்டர்-மூலமே இதன் சிறப்பு இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம்.

    கத்வால் சேலை என்பது ஜரிகை பேட்டர்ன் தனியாகவும், சேலை தனியாகவும், குட்டு பார்டர் தனியாக நெய்யப்பட்டு பின் இணைக்கப்படுகிறது. முழு புடவை என்பது பருத்தி நூலால் நெய்யப்பட்டு அதன் பார்டர்கள் மட்டும் தூய்மையான மல்பெரி பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டுகளால் நெய்யப்படுகிறது.

    கத்வால் சேலை நெய்யும் முறை என்பது “குப்படம்” என கூறப்படுகிறது. இதன் பார்டர் நெய்யும் ஸ்டைல் “கும்பம்” என கூறப்படுகிறது. கத்வால் சேலைகள் மிகவும் எடை குறைவானவை. இந்த முழு சேலையை அப்படியே மடித்து கொண்டே வந்தால் ஒரு தீப்பெட்டி அளவிற்கு கொண்டு வரமுடியும். பட்டு நூல் மற்றும் பருத்தி நூல் இணைந்தவாறு கத்வால் சேலைகள் நெய்யப்படுகின்றன. நாகரிக வடிவமைப்புடன் அனைத்து வயதினரும் அணிய ஏற்றவாறு அழகுடன் கத்வால் சேலைகளின் உருவாக்கம் உள்ளன.



    வண்ணமயமான கத்வால் சேலைகள்

    அனைத்து வண்ணங்களிலும் அழகிய கத்வால் சேலைகள் கிடைக்கின்றன. இயற்கை நிறச்சாயல் மற்றும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் வண்ண சிறப்பு என்றவகையில் கத்வால் சேலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. மாறுபட்ட வண்ண சேர்க்கை மற்றும் உலகளாவிய சிறப்பை பெறும் வகையில் இருவகை வண்ண கலவை என புதிய வடிவில் கத்வால் சேலைகள் வந்துள்ளன.

    சேலையில் பதியப்படும் உருவங்கள், சிற்பங்கள் என்பவை கோவில் சின்னங்கள், பூக்கள், இயற்கை வடிவங்கள் என்பதுடன் நவீன கணினி வடிவமைப்புகளாக கணித உருவங்கள் போன்றவை பதியப்படுகின்றன. சரிகை வேலைப்பாடு என்பது தங்க சரிகை மற்றும் வெள்ளி சரிகை கொண்டவாறு நெய்யப்படுகின்றன. பார்டர் மற்றும் புட்டா பகுதிகள் பட்டு நூல் பின்னணியில் நெய்யப்படுவதால் சரிகையின் ஜொலிப்பு அழகுடன் வெளிப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகளிலும் விரும்பப்படும் கத்வால் சேலைகள்

    அதிக மவுசு மற்றும் விற்பனை பொருளாக கருதப்படும் கத்வால் சேலைகள் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக விரும்பப்படுகிறது. மிக சிறப்புமிகு பரிசளிப்பு பொருளாக கத்வால் சேலைகள் இருப்பதுடன், நிறைய சேலைகள் எடுத்து சென்றாலும் எடை அதிகம் இருக்காது என்பதும் மிக முக்கிய காரணமாக உள்ளது. கத்வால் சேலையை பராமரிப்பது சுலபமானதாக உள்ளதாலும் அனைவரும் அதிகமாக விரும்புகின்றனர். வீட்டில் கத்வால் சேலையை துவைக்கும்போது முதல் மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் அலசி காய வைத்திட வேண்டும். அதன் பின்னரே குறைவான சோப்புதூள் போட்டு துவைத்து கொள்ளலாம். அதுபோல் அதிக சூரிய ஒளி படும்படி காய வைக்காமல் சற்று நிழலில் காய வைப்பது சிறந்தது.

    கத்வால் சேலைகள் என்பது சிகோ சேலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. கத்வால் சேலைகள் அதில் உள்ள கைவினை நெசவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விழாவிற்கு என பிரத்யேக ஆர்டர் மூலம் நெய்யப்படும் சேலைகளின் விலை மிக கூடுதலாக இருக்கும். சுமார் ரூ.10,000/- லிருந்து ஆரம்பிக்கும் கத்வால் பட்டு சேலைகள், பருத்தி சேலை எனும்போது சற்று விலை குறைவாகவே காணப்படுகிறது. 
    ×