search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shortage"

    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் காமராஜர் அணை வற்றியது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடி நீர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    தற்போது ஜிகா பைப் மூலம் அனைத்து பகுதி பொதுமக்களும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு என்பது திண்டுக்கல் நகர மக்களுக்கு தீராத பிரச்சினையாக உள்ளது.

    கஜா புயலின் தாக்கத்தினால் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் காமராஜர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே அணையின் நீர் மட்டம் 17.5 அடியாக உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் மழையின்றி அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

    23.5 அடி நீர் மட்டம் கொண்ட காமராஜர் அணையில் தற்போது 13.5 அடி மட்டுமே நீர் உள்ளது. இதனால் கோடை காலத்தில் திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இருந்த போதும் அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் உள்ள நீர் மூலம் 5 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய முடியும். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் கொண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் அதிகமான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் 1500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. #Summer #ElectricPower
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் இருப்பு இல்லாததால் அடிக்கடி உற்பத்தி பாதிக்கிறது. தற்போது 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கைவசம் இருக்கிறது. இதனால் மின் உற்பத்தி சீராக இருப்பதில்லை.

    மேலும் ஏற்கனவே உள்ள சில மின்திட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளன.



    இதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது வரும் கோடை காலத்தில் 1391 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது.

    இதற்காக 1500 மெகா வாட் மின்சாரத்தை வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடும் பணி நடைபெறும்.

    கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரம், அதற்கான விலை நிர்ணயம் குறித்து நிதி கமிட்டியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோடைகால பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை 5 ரூபாய் 29 காசு என்ற முறையில் 1500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பற்றாக்குறை சமயங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான்.

    ஏற்கனவே 2016-2017ம் ஆண்டில் 650 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்திருந்தோம். 2017-2018ம் ஆண்டில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகிற கோடை காலத்திலும் அதிக மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் என கருதுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கடம்பாறை நீர்மின் உற்பத்தி திட்டத்தில் கிடைத்து வந்த 400 மெகாவாட் மின்சாரம் இப்போது கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களால் இது மூடப்பட உள்ளது. இதனால் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருந்து இங்கிருந்து மின்சாரம் வராது.

    பாரத் உத்கல் மின் உற்பத்தி ஒப்பந்தப்படி 500 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால் அங்கிருந்தும் மின்சாரம் கிடைக்கவில்லை. எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் இன்னும் முழுமை பெறாததால் அங்கிருந்தும் போதிய மின்சாரம் வரவில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சீரான மின்வினியோகம் இல்லாததால் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2500 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டியதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Summer #ElectricPower

    ஒவ்வொரு ஆண்டும் கோடையில் டெல்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து டெல்லி கவர்னர் அனில் பாய்ஜாலை நாளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும், அதற்கு மக்களும் சிறிது பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், டெல்லியின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை  போக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அடுத்த வருட கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal
    தென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தென்சென்னை பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. நிலத் தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவ மழை சரிவர பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருகின்றன.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதி வீதியாக குடிதண்ணீருக்காக அலைகிறார்கள். பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம் பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.

    150 அடி ஆழத்துக்கும் கீழ் நீர்மட்டம் சென்று விட்டது. ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால் புதிதாக கூடுதல் ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்பு 20 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இருந்தது. தற்போது 150 அடி ஆழத்திற்கு மேல் ஆழ் குழாய்கள் அமைத்தால்தான் தண்ணீர் வருகிறது.

    தென்சென்னை பகுதியில் தெரு குழாய்களில் குடிநீர் வரவில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தான் தெரு ஓரம் உள்ள குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கூடுதல் செலவு செய்து குடிநீர் ‘கேன்’ வாட்டர்களை வாங்கி வருகிறார்கள்.

    இதுகுறித்து பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் கூறியதாவது:-



    பெரும்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கோடை காலத்தில் தெரு குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராது 4 நாட்களுக்கு ஒரு முறை தெரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. கோடை காலத்தில் மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் செலவு செய்து குடிநீர் கேன்களை வாங்கி வருகிறோம்.

    நிலத்தடி நீர் மட்டம் 150 அடி ஆழத்துக்கு சென்று விட்டதால் ஆழ்குழாய்களில் தண்ணீர் வரவில்லை. கூடுதல் ஆழத்தில் மீண்டும் ‘போர்வெல்’ போட்டு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், செம்பாக்கம் பகுதிகளிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.

    பல்லாவரம் சுகம் நகரை சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது:-

    குடிநீர் தட்டுப்பாட்டால் மாதத்துக்கு ரூ.3,500 கூடுதல் செலவு செய்து தண்ணீர் தேவையை சமாளித்து வருகிறோம். பாலாற்று தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்படுகிறது. நிலத்தடி தண்ணீரும் ஆழ் குழாய் கிணறுகளில் வரவில்லை.

    தெருக்குழாய்களில் ஒழுங்கற்ற நிலையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பழைய ஆழ்குழாய்களை மாற்றி புதிய ஆழ்குழாய்கள் கூடுதல் ஆழத்தில் அமைத்து பொது மக்கள் தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×