search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    13 அடியாக குறைந்த காமராஜர் அணை - திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    13 அடியாக குறைந்த காமராஜர் அணை - திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் காமராஜர் அணை வற்றியது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடி நீர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    தற்போது ஜிகா பைப் மூலம் அனைத்து பகுதி பொதுமக்களும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு என்பது திண்டுக்கல் நகர மக்களுக்கு தீராத பிரச்சினையாக உள்ளது.

    கஜா புயலின் தாக்கத்தினால் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் காமராஜர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே அணையின் நீர் மட்டம் 17.5 அடியாக உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் மழையின்றி அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

    23.5 அடி நீர் மட்டம் கொண்ட காமராஜர் அணையில் தற்போது 13.5 அடி மட்டுமே நீர் உள்ளது. இதனால் கோடை காலத்தில் திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இருந்த போதும் அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் உள்ள நீர் மூலம் 5 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய முடியும். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் கொண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    Next Story
    ×