என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ship"
- கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
- விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு விமானங்கள் மூலமே வருகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவதற்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வெளிநாடு வாழ் கேரள மக்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் இக்கோரிக்கையை ஏற்று கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.
கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும்.
இதுவே விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால் கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிய முதல் மாநிலம் கேரளா என்ற பெருமையை பெறும்.
- ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
- இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சேலம்:
இந்திய அரசு பாதுகாப்பு துறையில் உள்ள முப்படை களான ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர்.
அதன்படி இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
1.365 இடங்கள்
இந்த தேர்வுக்கு திரு மணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி கணிதம், இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் 01.11.2002- 30.04.2006 -க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.06.2023 ஆகும்.
விண்ணப்ப கட்டணம், ஜி.எஸ்.டி., வரி என ரூ.649 செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோ தனை உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் பணி யமர்த்தப்படுவார்கள்.
இந்த தகவலை இந்திய கப்பல்படை தெரிவித்துள்ளது.
- கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
- பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.
புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.
- ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.
- கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
சென்னை துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தென் தமிழக பகுதிக்கு வரும் கண்டெய்னர்களை புதுவை துறைமுகத்துக்கு கொண்டு வந்து அனுப்பி வைக்க இரு துறைமுகம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன்படி ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.
கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சென்றது. அங்கிருந்து 50 காலி கண்டெய்னர்களுடன் உப்பளம் துறைமுகத்திற்கு கப்பல் திரும்பியது.
கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கண்டெய்னர்களை டிரெய்லர் லாரியில் இறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று போலீசார் முன்னிலையில் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனிடையே கப்பலில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி, இறக்க ராட்சத கிரேன் புதுவைக்கு கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டது.
மரப்பாலம் சந்திப்புக்கு வந்தது. அங்கிருந்து மற்றொரு சிறிய கிரேன் மூலம் பெரிய கிரேன் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலியார்பேட்டை, உப்பளம் சாலை வழியாக கிரேன் துறைமுகம் சென்றது.
கிரேன் சென்ற நேரம் அரசு ஊழியர்கள், பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரம் என்ப தால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் கிரேன் துறைமுகத்தை அடைந்தது. இருதரப்பினர் பேச்சுவார்த்தைக்கு பின் கண்டெய்னர்கள் இறக்கி, ஏற்றும் பணி தொடங்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் ஆற்று மணல் சரக்கு கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக ஒரு யூனிட் மணல் ரூ.10,350 என்ற விலையில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பலில் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் ஏற்றிய நிலையில் 3-வது கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஏற்கெனவே 2-வது கப்பலில் வந்த மணல் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில் 3-வது கப்பலிலும் மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளூர் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஒரே வாரத்தில் 2 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
காரைக்கால்:
மும்பையில் இருந்து புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள துறைமுகத்துக்கு தனியார் கப்பல் ஒன்று தூர்வாரும் பணிக்கு வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 பேர் பணியில் இருந்தனர். துறைமுக பகுதியில் தூர்வாரும் பணி முடிந்து அடுத்த பணிக்காக அந்த கப்பல் காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ‘கஜா’ புயல் கரையை கடந்தது.
இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காரைக்கால் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
மேலும் பலத்த சூறாவளி காற்றானது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட மும்பை கப்பலை கரை நோக்கி இழுத்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தும் பயனில்லை.
இதனால் அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்க மும்பையில் இருந்து கப்பல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கப்பல் இதுவரை காரைக்கால் துறைமுகத்துக்கு வரவில்லை. இதனால் அந்த தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கப்பல் அதே இடத்தில் நிற்கிறது.
இது குறித்து காரைக்கால் தனியார் துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதற்கு 3 இழுவை கப்பல்கள் தேவைப்படும். ஒரு கப்பல் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. மீதி 2 கப்பல்கள் மும்பையில் இருந்து வரவேண்டும். ஆனால் தற்போது கஜா புயலை அடுத்து தொடர்ந்து புயல்கள் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புயல், மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பிய பிறகுதான் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவழைக்க முடியும். அதுவரை இந்த கப்பல் அதே இடத்தில்தான் நிற்கும்.
பொதுவாக கடலின் நீர்மட்டம் அதிகளவு இருந்தால்தான் இழுவை கப்பலை இயக்க முடியும். தற்போது காரைக்கால் கடலில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் மும்பையில் இருந்து இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு இந்த கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கப்பலில் உள்ள 7 ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்கள் ஏற்கனவே வைத்துள்ளனர். எனவே அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவரை அவர்களும் கப்பலில் இருந்து இறங்கி வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ship #heavyrain
கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது.
அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் அந்த படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜூ என்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.
கடற்படையினர், விமானப் படையினர் மூலம் தொடர்ந்து மற்ற மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் தங்கள் படகுகளில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் பிணம் நேற்று இரவு மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் அவரது உடல் சிக்கியது. உடனடியாக ஏசுபாலனின் உடல் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.
ஏசுபாலனுக்கு சுபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் ஏசுபாலன் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஏசுபாலனுக்கு ராஜேஷ் குமார், ஆரோக்கிய தினேஷ் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கிய படகில் சிக்கி மாயமாகிவிட்டனர். அவர்களது கதி என்னவென்று இதுவரை தெரியாதது அவர்களது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விபத்து நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால் மற்ற 7 மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விஜயகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். அவரும் அதை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையில் மீனவர்களின் குடும்பத்தினர் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அவரும் தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்கி கூறினார்.
ராமன்துறையில் மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத கப்பல் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தாங்கள் அந்த கப்பல் பற்றிய அடையாளத்தை ஆதாரத்துடன் கொடுத்துள்ளதால் அடையாளத்தை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடிப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி, முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மீனவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
மேலும் கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி படகு மீது மோதிய கப்பல் மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று கூறப்படுகிறது. நேற்று மங்களாபுரம் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் கப்பல் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கப்பல் மோதி படகு உடைந்த விபத்தில் பலியான 3 மீனவ குடும்பத்தினருக்கும் அரசு ரூ.10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் வேலை வழங்க வேண்டும். இதுபோல காயமடைந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்