search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

    • ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு பாதுகாப்பு துறையில் உள்ள முப்படை களான ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர்.

    அதன்படி இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    1.365 இடங்கள்

    இந்த தேர்வுக்கு திரு மணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன.

    கல்வி தகுதி கணிதம், இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் 01.11.2002- 30.04.2006 -க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.06.2023 ஆகும்.

    விண்ணப்ப கட்டணம், ஜி.எஸ்.டி., வரி என ரூ.649 செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோ தனை உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் பணி யமர்த்தப்படுவார்கள்.

    இந்த தகவலை இந்திய கப்பல்படை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×