search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராட்சத கிரேன் புதுவை துறைமுகம் வந்தது
    X

    கப்பலில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி இறக்க புதுவைக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்ட காட்சி.

    ராட்சத கிரேன் புதுவை துறைமுகம் வந்தது

    • ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.
    • கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தென் தமிழக பகுதிக்கு வரும் கண்டெய்னர்களை புதுவை துறைமுகத்துக்கு கொண்டு வந்து அனுப்பி வைக்க இரு துறைமுகம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதன்படி ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.

    கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சென்றது. அங்கிருந்து 50 காலி கண்டெய்னர்களுடன் உப்பளம் துறைமுகத்திற்கு கப்பல் திரும்பியது.

    கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கண்டெய்னர்களை டிரெய்லர் லாரியில் இறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று போலீசார் முன்னிலையில் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனிடையே கப்பலில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி, இறக்க ராட்சத கிரேன் புதுவைக்கு கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டது.

    மரப்பாலம் சந்திப்புக்கு வந்தது. அங்கிருந்து மற்றொரு சிறிய கிரேன் மூலம் பெரிய கிரேன் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலியார்பேட்டை, உப்பளம் சாலை வழியாக கிரேன் துறைமுகம் சென்றது.

    கிரேன் சென்ற நேரம் அரசு ஊழியர்கள், பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரம் என்ப தால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் கிரேன் துறைமுகத்தை அடைந்தது. இருதரப்பினர் பேச்சுவார்த்தைக்கு பின் கண்டெய்னர்கள் இறக்கி, ஏற்றும் பணி தொடங்கும் என தெரிகிறது.

    Next Story
    ×