search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharmila"

    • சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொகுதியான கஜ்வெல்லில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா ஆதரவு தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கநேற்று தனது இல்லத்தில் சர்மிளா புறப்பட்டார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தயார் நிலையில் இருந்த போலீசார் சர்மிளாவை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.அவர்களுக்கு ஞானமும், சன்மார்க்கமும் கிடைக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். போலீசார் அரசியல் சாசனத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சர்மிளாவை வீட்டு காவலில் வைத்தனர் இது குறித்து சர்மிளா கூறுகையில் :-

    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடக்கு முறையை பயன்படுத்துகிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது. மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பக் கூடாதா.

    என்னை குறி வைத்து வீட்டு காவலில் வைப்பது வெட்கக்கேடானது என கூறினார்.

    • பேருந்து ஓட்டுநர் பணியை துறந்த கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார்.
    • ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை என்று கமல் கூறினார்.

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    இதற்கிடையே, தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார். 



    இந்நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர் பேசிய கமல், ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார் என்றார்.

    • கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
    • எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது.

    மேட்டூர்:

    ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது. தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.

    சமீபத்தில் கோவையில் ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். கோவைைய தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களம் இறங்கி உள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர், செட்டிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 28). சிறு வயது முதலே கனரக வாகனம் இயக்கி அனுபவம் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் செயல்பட்டு தனியார் மகளிர் கல்லூரியில் பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தார். இந்த கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

    இதனால் சேலத்தில் முதல் முறையாக கல்லூரி பஸ்சை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றார்.

    இதனிடையே தமிழ்ச்செல்விக்கு வெளி மாவட்டங்களுக்கிடையே பொது பஸ்சை இயக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டும் பணியில் சேர்ந்தார். அவர், தினமும் மேட்டூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இந்த பஸ்சை இயக்கி வருகிறார்.

    மேட்டூரில் முதல் முறையாக தனியார் நகர பேருந்தை இயக்கும் முதல் பெண்ணாக திகழும் தமிழ்ச் செல்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தேன். தற்போது அந்த பணியில் இருந்து விலகி, தனியார் பஸ்சில் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரைவராக வேலை பார்த்து வரும் ஷர்மிளாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்தான் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இன்று பிற்பகலில் தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் ஷர்மிளாவுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    • ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை.
    • கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

    பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை. ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பெண் நடத்துனருடன் தான் பிரச்சினை என்று கூறினார்.

    இதன்பின்னர் விளக்கம் அளித்த பேருந்து நடத்துனர், கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    இருந்தாலும் ஓட்டுநர் ஷர்மிளாவிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் வீண்பிடிவாதம் செய்கிறார். வேலை செய்ய பிடிக்கவில்லை என பலமுறை கூறினார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
    • விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

    விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சர்மிளா சென்றார்
    • சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சியின் (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா சென்றார்.

    வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
    • தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.

    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.

    இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.

    • இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
    • அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    அங்கு ஆட்சியில் உள்ள சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசை கடுமையாக சாடி வருகிறார். இதையொட்டி அவர் மாநிலம் தழுவிய பாதயாத்திரை நடத்தி வந்தார்.

    ஆனால் அந்த பாதயாத்திரையை தொடர்வதற்கு அவருக்கு போலீஸ் அனுமதி தர மறுத்து விட்டது. போலீஸ் அனுமதி தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் அதிரடியாக அறிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, "தெலுங்கானா ஐகோர்ட்டு எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளித்தும் போலீஸ் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த பாதயாத்திரையை தொடரவிடக்கூடாது என்று முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கருதி, போலீசை பயன்படுத்தி உள்ளார்" என குற்றம் சாட்டினார்.

    அவர் அறிவித்தபடியே ஐதராபாத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    முன்னதாக அவர் அங்கு உசேன் சாகர் ஏரி பகுதி அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் ஒரு மனு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து அங்கேயே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினார். ஆனால் அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், மனு அளிக்கவும் மட்டுமே அனுமதி தருவது வழக்கம். உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தருவதில்லை. இதையடுத்து சர்மிளா தனது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதத்தைதத் தொடங்கினார். அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

    இதனால் அவரது உடல்நலம் பாதிக்கத்தொடங்கியது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று அதிகாலையில் போலீசார் சர்மிளா கட்சியினரையும், பத்திரிகையாளர்களையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.

    அதைத் தொடர்ந்து சர்மிளாவின் உண்ணாவிரதத்தை முறியடித்து, அவரை வலுக்கட்டாயமாக அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சர்மிளாவின் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

    சர்மிளா தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை அதிரடியாக மோசமானது.

    ஊடகத்தினரையும், கட்சியினரையும் அகற்றிவிட்டு, சர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.

    அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். சர்மிளாவின் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது 'எலக்டிரோலைட்' சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். இது அவரது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சர்மிளா தற்போது சிகிச்சையில் உள்ளார். சிகிச்சை பலன் அளிக்கிறது. அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டள்ளது.

    மேலும், அவர் 2 முதல் 3 வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.



    முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    ×