search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "serena williams"

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. #USOpen #SerenaWilliams
    வாஷிங்டன் :

    நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

    இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

    3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

    இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.



    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பெனால்டி வழங்கிய கோபத்தில் நடுவரை திருடன் என்று செரீனா வில்லியம்ஸ் திட்டியுள்ளார். #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார். அவர் கூறியதாவது:-

    நான் மோசடி எதுவும் செய்யவில்லை. பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று நான் பார்க்கவில்லை. நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது. வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன்.

    இவ்வாறு 36 வயதான செரீனா தெரிவித்தார்.

    இதற்கிடையே அவரது பயிற்சியாளர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தான் கொடுத்த சைகையை செரீனா பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen #SerenaWilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள்  இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 36), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.



    துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த செரீனா, அதன்பின்னர் அபாரமாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்லோவன் ஸ்டீபன்சை வீழ்த்தியவர். எனவே, அரையிறுதி ஆட்டத்தில் செரீனா கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

    கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றபிறகு முதல்  கிராண்ட் ஸ்லாம் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செரீனா. #USOpen #SerenaWilliams
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ், ஸ்டீபன்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpen2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எம் எலினேட்டை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஜ் 6-4, 6-0 என எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான ஜூலியா ஜார்ஜஸ் 6-2, 6(5)-7(7), 6-2 என கலின்ஸ்கயாவை வீழ்த்தினார். 8-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவோ 6-4, 7(7)-6)4) என வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5, 6-3 என வெற்றி பெற்றார். 3-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஸ்டீபன்ஸ் 6-1, 7-5 என வெற்றி பெற்றார்.

    7-ம் நிலை வீராங்கனை ஸ்விடோலினா, 15-ம் நிலை வீராங்கனை மெர்ட்டென்ஸ், 12-ம் நிலை வீராங்கனை முகுருசா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Cincinnati #SerenaWilliams
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பீட்டர் கோஜோவ்சிக்கை (ஜெர்மனி) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கிவிடோவா 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த சீசனில் கிவிடோவா பெற்ற 40-வது வெற்றி இதுவாகும்.  Cincinnati #SerenaWilliams 
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். #Cincinnati #SerenaWilliams
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. #RogersCup #Serena
    டென்னிஸ் அரங்கில் கொடிகட்டி பறந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பரிடம் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.



    அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.

    கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார். #SerenaWilliams
    லண்டன்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-வது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9-வது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4-வது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5-வது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-வது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9-வது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10-வது இடமும் பிடித்துள்ளனர். விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார்.  #SerenaWilliams  #Tamilnews
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #Wimbledon2018 #SerenaWilliams #AngelliqueKerber
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இதில் 11-ம் நிலை வீரரான ஜெர்மனியின் கெர்பர் 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செரினா வில்லியம்சை எதிர்கொண்டார்.

    தொடக்கம் முதலே கெர்பர் சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 



    இரண்டாவது செட்டிலும் கெர்பர் அதிரடியாக ஆடினார். செரினா வில்லியம்சால் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனல கெர்பர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சுடன் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மோதுகின்றனர். #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மல்லுகட்டுகிறார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரீனா, இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

    முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான அரை இறுதி ஆட்டம் 5½ மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவு கிடைக்காமல் இழுத்து கொண்டே போனது. #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். #Serena #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    2-வதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ் - 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினார்கள்.



    இதில் எந்தவித சிரமமின்றி செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் - செரீனா வில்லியம்ஸ் சனிக்கிழமை (ஜூலை 14-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றியை ருசித்துள்ளார். #Wimbledon2018 #Serena
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 3-வது காலிறுதி ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத கமிலா ஜியார்ஜியை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை ஜியார்ஜி 6-3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 2-வது செட்டை 6-3 என வீழ்த்தி அசத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். அந்த செட்டை 6-4 எனக் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.



    கடைசி காலிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜோர்ஜஸ் 20-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை ஜூலியா 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 எனக் கைப்பற்றினார். பின்னர் 3-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜூலியா ஜோர்ஜெஸ் அரையிறுதில் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.
    ×