search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "semi finals"

    • டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
    • காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

    மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.  இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்டெபானிசை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐந்தாம் தரநிலைவீரர் டொமினிக் தீமிடம் 3-6, 7-6(11), 6-4 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வெற்றி பெற்ற டொமினிக் தீம், அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். 
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டியில் மும்பை அணி ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. #ProVolleyball
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

    கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. #ProVolleyball
    சென்னையில் நடைபெற்ற 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. #NationalSeniorvolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னொரு காலிறுதியில் தமிழக அணி 25-20, 23-25, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    பெண்கள் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 25-13, 25-15, 25-11 என்ற நேர்செட்டில் டெல்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-12, 25-16, 25-12 என்ற நேர்செட்டில் அரியானாவை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது. #NationalSeniorvolleyball
    வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. #WomenWorldT20

    கயானா:

    6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 83 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வெஸ்ட்இண்டீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 31 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    ‘ஹாட்ரிக்’ வெற்றி மூலம் வெஸ்ட்இண்டீஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 19.3 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 5 புள்ளியுடன் இங்கிலாந்தும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.

    தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் மோதும் ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

    ‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இதனால் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

    இந்த பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நியூசிலாந்து 2-வது வெற்றிக்காகவும், அயர்லாந்து முதல் வெற்றிக் காகவும் காத்திருக்கிறது.  #WomenWorldT20

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் நடால் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை கடுமையாக போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தார். #USOpen2018 #nadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) கால் இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் ஒரு புள்ளி கூட பெறாமல் 0-6 என்ற கணக்கில் இழந்தார். அதற்கு அடுத்த இரண்டு செட்டை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4-வது செட்டை டொமினிக் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது செட்டை நடால் கைப்பற்றி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5),

    நடால் இந்த வெற்றியை பெற மிகவும் கடுமையாக போராடினார். 4 மணி 48 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே அவரால் வெற்றிபெற முடிந்தது.

    நடால் அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா)வை சந்திக்கிறார். #USOpen2018 #nadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை வீழ்த்தி டெல்போட்ரா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். #USOpen2018 #delPotro
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சந்தித்தார்.

    இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார்.  #USOpen2018 #delPotro
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen #SerenaWilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள்  இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 36), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.



    துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த செரீனா, அதன்பின்னர் அபாரமாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்லோவன் ஸ்டீபன்சை வீழ்த்தியவர். எனவே, அரையிறுதி ஆட்டத்தில் செரீனா கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

    கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றபிறகு முதல்  கிராண்ட் ஸ்லாம் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செரீனா. #USOpen #SerenaWilliams
    ×