search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னேற்றம்"

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர பட்டியலில் லண்டன் முதல் இடம்.
    • இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம்.

    உலகளவில் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பெங்களூரு, 2023ம் ஆண்டு பட்டியலில் 6வது இடத்திற்கு இறங்கி முன்னேற்றம் கண்டுள்ளது.

    லண்டன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய ஆய்வு பட்டியலின்படி, பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 28.10 நிமிடம் ஆகிறது.

    டாப் 10 நகரங்களில் இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.
    • 3 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சி பெண் தலைவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தா லோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பெண் ஊராட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டம் 73-வது திருத்தத்தி ன்படி ஊராட்சி அமைப்பு களில் மூன்றில் ஒரு பங்கு பதவியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச்சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள் ளது. கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கிராம ஊராட்சிகளே ஆகும்.

    கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுய முடிவெடுத்து தங்களது முத்திரை பதிப்பதோடு, உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களுடைய உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.

    சமத்துவ மயானம் செயல்படும் 3 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விருது தொகையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது.

    வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வருவாய்த்துறை மூலமாக நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 7,135 ஆதிதிராவிடர் மக்களுக்கும் 709 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 7,844 நபர்களுக்கு முழுமையாக வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    2,875 ஆதி திராவிடர் மக்களுக்கும் 114 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 2,989 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 4,855 (61.9 சதவீதம்) மக்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில் ஆதி திராவிடர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியின மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட விண்ணப்பி க்கப்பட்டிருப்பின் உடனடியாக முன்னுரிமை வழங்கி வேலை வழங்கிட வேண்டும். செயல்படுத்த ப்படும் திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஆதிதிரா விடர், ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் உதவி இயக்கு நர் (கிராம ஊராட்சிகள்) சாந்தி, இந்தியன் வங்கி மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ), பெண் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இணைப்பு மற்றும் பொருளாதார உதவித் தொகை, ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இ- சேவை மையம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி உட்கட்டமைப்பு. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம். சிறப்பு திட்ட செயலாக்கம் சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திட்டம் பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த திட்டங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம்பூபதி, தமிழழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திட்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×