search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe"

    • திருமங்கலம் அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
    • பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரினை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த சிவகார்த்தி கேயன்(வயது27) உள்ளிட்ட 7 பேர் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவகார்த்திகேயன் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மேலஉரப்பனூர் திரும்பினார். அவர் நேற்றுஇரவு கிராமத்தில் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சிவகார்த்திகேயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் தலை, கை, கால்களில் படுகாயமடைந்த சிவகார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
    • விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருபுவனம் மேல சாலை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சக்தி பிரகாஷ் (19), பிரிதிவிராஜன்(20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி ரத்தினகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் படுகா யமடைந்த ரத்தினகுமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி னர். முதல்கட்ட விசார ணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரகாஷ், பிரிதிவிராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.
    • மர்மநபர்கள் சிலர் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவரை சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் மனோகரன் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. இதனால் மனோகரன் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணை யில், தஞ்சையை சேர்ந்த சிலர் மனோகரனை மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லலாம் என அழைத்து சென்றுள்ளனர்.

    பின்னர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர் என்பதும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து மனோ கரனை கொலைசெய்தவ ர்கள் யார்? என விசா ரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பஸ் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கணவர் பிரிந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். #Karnatakawoman
    சிக்கமகளூரு:

    சிக்கமகளூரு டவுன் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பேண்ட் சட்டை அணிந்த பெண் ஒருவர் வந்தார். அவர் கையில் வீச்சரிவாள் வைத்திருந்தார். அதனுடன் அங்குமிங்கும் அந்த பெண் சுற்றித்திரிந்தார். மேலும் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை பார்த்து அந்தபெண், உன்னை வெட்டி கொன்றுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சில பயணிகள், அந்த பெண்ணிடம் இருந்த வீச்சரிவாளை பறிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் வெட்டி விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதனால் சம்பவம் பற்றி பயணிகள், சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, பெண்ணிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில், அந்த பெண் சிக்கமகளூரு ஹரீப்ஹள்ளி பகுதியை சேர்ந்த சுருதி என்பதும், இவருக்கு திருமணம் ஆகி கணவர், 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. ஆனால் கணவர், சுருதியையும், அவரது மகனையும் விட்டு பிரிந்து சென்று விட்டதும் தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்றதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் அவர் வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சுருதியை, சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். மேலும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டு, சிக்கமகளூருவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நேற்று காலை சேர்த்தனர். வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் வலம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெண் வீச்சரிவாளுடன் பஸ் நிலையத்தில் சுற்றிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி சலசலப்பை உண்டாக்கியுள்ளது. #Karnatakawoman
    ×