search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை
    X

    ஆற்றில் மிதந்த மனோகரன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை

    • தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.
    • மர்மநபர்கள் சிலர் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவரை சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் மனோகரன் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. இதனால் மனோகரன் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணை யில், தஞ்சையை சேர்ந்த சிலர் மனோகரனை மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லலாம் என அழைத்து சென்றுள்ளனர்.

    பின்னர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர் என்பதும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து மனோ கரனை கொலைசெய்தவ ர்கள் யார்? என விசா ரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×