search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe"

    • கோவில் திருவிழாவில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது33). இவரது மனைவி ராஜ லட்சுமி(25). விருதுநகர் மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவிக்கும், ராஜலட்சுமி யின் சகோதரர் சதீஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பான பிரச்சினையில் 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் மணிமாறன் குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கி பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு ராஜலட்சுமி கணவருடன் வந்தார். அங்கு மணிமாறன் சாமியாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் ராஜலட்சுமியை பார்த்ததும் ஆவேசமடைந்து திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராஜலட்சுமியின் சகோதரி முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த சுரேசுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனால் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    • மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராஜாஜி மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 40). இவரது கணவர் மாயாண்டி (41). இவருக்கும் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாயாண்டி மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவ்வப்போது மது போதையில் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாயாண்டி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மது போதையில் வந்த மாயாண்டி விஜயலட்சுமி உடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி தான் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றார். அப்போது தடுப்பதற்காக ஓடி வந்த அவர்களது மகன் கருப்பசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதை பார்த்த மாயாண்டி மனைவிக்கும் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இது குறித்து சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அமுதா (40). இவரது கணவர் பூமாரியப்பன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூமாரியப்பன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பூமாரியப்பன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.

    இப்போது பூ மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் அமுதாவை தாக்க முயற்சித்தார். இப்போது அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு பூமாரியப்பன் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.

    • மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மாரிசெல்வம். சம்பவத்தன்று வள்ளியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரிசெல்வம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக அவனை தேடுகிறீர்கள் என வள்ளியம்மாள் கேட்டுள்ளார்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வள்ளியம்மாளை வெட்டி விட்டு தப்பி சென்றனர். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகார் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
    • முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார்   இந்நிலையில் இவரது தந்தை முனியப்பிள்ளை (60) வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது துணி விலகி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அங்கிருந்த வர்கள் அவர் மீது துணியை போட்டுள்ளனர்  இதனால் முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த முனியப்பிள்ளை அருகில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் மூர்த்தியை வெட்டினார் இதில் காயமடைந்த மூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பிள்ளையை கைது செய்தனர்.

    • வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்,. இதனால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. மாசிமகத்தை யொட்டி புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் சாமியை தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். தீர்த்தவாரி முடிந்ததும் சாமியை மீண்டும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்  புவனகிரி அருகே உள மேலமானகுடி பகுதியில் சாமியை கொண்டு வந்த போது அப் பகுதியை சேர்ந்த வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்.   இதனால் சாமியை ஊர்வமாக கொண்டு வந்தவர்கள் ஆக்திரம் அடைந்தனர். இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இந்த தகராறில் எதிர் தரப்பை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அருப்புக்கோட்டையில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை பெரியார் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கம்(வயது 35), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு தங்கம் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டின் அருகே வந்தபோது, அருப்புக் கோட்டை கலைஞர் நகரை சேர்ந்த உதயகுமார்(30) மற்றும் அவரது தந்தை மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் தங்கத்தின் ஆட்டோ மீது மோதியது. இதனால் தங்கம் அவர்களிடம் ஏன் இப்படி வந்து மோதினீர்கள்? என கேட்டுள்ளார். அப்போது அவர் களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதய குமார் மற்றும் மூர்த்தி தங்கத்தை தாக்கி அரிவாளால் வெட்டி யுள்ளனர். இதனை பார்த்து தடுக்க வந்த தங்கத்தின் தந்தை சுப்பிரமணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    மேலும் தங்கம் மற்றும் சுப்பிரமணியை உதய குமார் மற்றும் மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமார் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளிக்கு அரிவாள் வெட்டு.
    • இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளி கங்காதரன் (வயது30). இவருடைய தங்கையை தாரமங்கலம் சக்கரை விநாயகர் கோவில்

    பகுதியை சேர்ந்த சந்தான கோபால் (38) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து

    வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் பணம் வாங்கி வரச்சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். கங்காதரன் இதனை கண்டித்து வந்த தால் ஆத்திரம் அடைந்த சந்தானகோபால் நேற்று மதியம் கங்காதரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கங்காதரன் வெட்டி யுள்ளார்.

    கங்காதரன் அங்கி ருந்து தப்பி ஓடிய போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சந்தானகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி கங்காதரனிடம் வாக்கு மூலம் பெற்று தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடும்ப தகராறில் மைத்துனரை அரிவா ளால் வெட்டிய சம்பவம்

    தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர் சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீது விழுந்துள்ளது.
    • இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(வயது62). சக்திவேல் (65). இவர்கள் இருவரும்பக்கத்து பக்கத்துவீட்டுக்காரர்கள். சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர்சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீதுவிழுந்துள்ளது. இதனைஅவர்தட்டிக்கேட்டு தண்ணீரைதிருப்பிவிடசொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல், அவரதுமகன்கள்வினோத், விக்னேஷ், மருமகள் பிரியங்கா ஆகியோர் சேர்ந்துசுப்பிரமணியன் மற்றும்அவரது மகன்களை அரிவாளால் வெட்டி இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் அவரது மகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாகசுப்பிரமணியன் கொடுத்தபுகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேல், அவரது மகன்கள் வினோத்,விக்னேஷ்,மருமகள் பிரியங்கா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவாளால் முகத்திலேயே சரமாரியாக வெட்டினர்.
    • விசாரணையில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    வல்லம்:

    தஞ்சாவூர் அருகே வடக்கு வாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 36).

    பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன் தீபாவளி பண்டிகைகாக தஞ்சைக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து சுவாமிநாதன் தஞ்சை அருகே உள்ள‌ பிருந்தாவனம் ஆர்ச் அருகே வந்துள்ளார்.

    அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவா ளால் முகத்திலேயே சரமாரி யாக வெட்டினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் இறந்தார்.

    இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார்வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில், சுவாமிநா தனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்ப ட்டுள்ளார். இதற்கு பழிக்குப்பழி வாங்கு வதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.

    தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே பிரேம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • கலெக்டர் உத்தரவுபடி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பள்ளியக்ரஹா ரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் பிரேம் (வயது 30). நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்ப ட்டார்.

    இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மனக்கரம்பையை சேர்ந்த விஸ்வ பிரசாத், பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவர்களில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த உத்தரவு நகல்களை திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்‌.

    • தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி, மகன்களுடன் தகராறு செய்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி- மகன்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அருகில் உள்ள உறவினர் பரமசிவம் வீட்டில் சென்று அவரது மனைவி தனது மகன்களுடன் தங்கியிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நரசிம்மமூர்த்திக்கும், பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழ ந்தார்.இது குறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×