search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scholarship"

    • புதிதாக பணியில் இணைந்தவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர்
    • அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை பார்க்கின்றனர்.

    பல்லடம்:

    தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், உள்ளிட்டோர் அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவுக்காக சிரமப்படுகின்றனர்.

    இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் வாரிசுகளுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து கோவில் பூசாரிகள் சங்க மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது:-

    ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உண்மையில் அவர்களுக்கு பயன் அளிப்பதாகவே கருதுகிறோம். இருந்தாலும் 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள் பலர் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றனர்.

    தற்போது புதிதாக பணியில் இணைந்தவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர். இவர்களின் வாரிசுகள் உயர்கல்வி படிக்கும் வயது அடைந்து இருப்பார்களா என்பது சந்தேகமே ? இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் எண்ணற்ற அர்ச்சகர்கள், பூசாரிகள் நிச்சயம் பயனடைவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
    • ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராம்கோ குரூப் நூற்பாலைகளில் பணி புரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படு கிறது. அதன்படி இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சுமார் 1,885 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைவர் மோகனரெங்கன், துணைத் தலைவர்-மனிதவளம் நாகராஜன், முதுநிலை பொது மேலாளர்- பணிகள் பாலாஜி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்கங்களின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.
    • விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் தலைவர் ஏ.பி. அருண் பழனிசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநர் எம்.டி. டாக்டர் சுந்தர்ராஜன், சென்னை சிப்காட் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே சிறப்புறையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அதன்படி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை ,மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, சலவை தொழிலாளிகளுக்கு சலவை பெட்டிகள் என ரூ.2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நலத்திட்ட உதவிகள் ஆனந்தம் ரோட்டரி சங்க தலைவர் அருண் பழனிச்சாமியின் தந்தை கே. பழனிச்சாமி கவுண்டர் நினைவாக தொடர்ந்து 15-வது ஆண்டாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி , ஆனந்தம் ரோட்டரி செயலாளர் கௌரிசங்கர், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பலவேசம், பயிற்சியாளர் பாலசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாவட்ட உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம்

    ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (BE போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.

    தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்க னவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளை ஞர்கள் பூர்த்தி செய்து வேலை நாட்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

    • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8000, இளநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.12000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கபட்டு வருகிறது.

    மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3000, இளநிலை படிப்பிற்கு ரூ.5000 மற்றும் முதுநிலை படிப்பிற்கு ரூ. 6000 வழங்கபட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொ ழுது பெறப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி,  தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினை த்தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக் க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம் ,10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெ றவிரும்பும் மனுதாரர்கள், தங்களின்வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வி ண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும், இலவசமாக பெற்று க்கொள்ளலாம்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெ றுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடங்கு ம் காலா ண்டிற்கான உதவித்தொகை விண்ண ப்பங்களை மனுதாரர்கள் 31.8.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியம யமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இத் தகவலை கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
    • வருகிற 10-ந் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நுழைவு தேர்வில் பெற்ற தகுதியுடன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைபேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ Mfpa ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023-24- ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்பத்துடன் செல்போன் எண், மாணவரின் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார்
    • இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே குடகிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீ வளர்க்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு சீட்ஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குநர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார். இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    மதுரை

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதகை ெபற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளி–யின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வந்து சங்கத்தில் கொடுக்க வேண்டும்.

    மேலும் இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள், குறிப்பாக விதவை பெண்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாங்கள் படித்த தையல் கலை சான்றிதழ் நகல் மற்றும் 2 புகைப்படங்களுடன் விண்ணப்பம் எழுதி சங்கத்தில் நேரில் வந்து அதனை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் "இ-சேவை" மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ×