search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளாளர் உறவின்முறை"

    • வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி. மகளிர் சுய உதவி குழு சார்பாக வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். புரவலர் மாரியப்பன், மோகன், சந்தன பாண்டி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முருகவேல் வரவேற்றார். வ.உ.சி.படத்திற்கு இணைச்செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், பி.டி.ஆர் தனவேல், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தென் மண்டல அமைப்பு செயலாளர் அன்னலட்சுமி சகிலா, இம்பா மாவட்ட தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். ஆலோசகர் பாபநாசம் கொடியேற்றினார். மக்கள் தொடர்பாளர் நாகமுத்து ராஜா இனிப்பு வழங்கினார்.இதில் தியாகராஜன், சங்கர், ராஜேந்திரன், குப்புசாமி, அச்சுதன், கலியபெருமாள், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.

    • தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    மதுரை

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதகை ெபற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளி–யின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வந்து சங்கத்தில் கொடுக்க வேண்டும்.

    மேலும் இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள், குறிப்பாக விதவை பெண்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாங்கள் படித்த தையல் கலை சான்றிதழ் நகல் மற்றும் 2 புகைப்படங்களுடன் விண்ணப்பம் எழுதி சங்கத்தில் நேரில் வந்து அதனை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×