வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்  தகவல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொ ழுது பெறப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி,  தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினை த்தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக் க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம் ,10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெ றவிரும்பும் மனுதாரர்கள், தங்களின்வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வி ண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும், இலவசமாக பெற்று க்கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெ றுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடங்கு ம் காலா ண்டிற்கான உதவித்தொகை விண்ண ப்பங்களை மனுதாரர்கள் 31.8.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியம யமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இத் தகவலை கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com