search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனந்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    X

    கோப்புபடம்

    ஆனந்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.
    • விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .விழாவில் வெள்ளிரவெளி பஞ்சாயத்து தலைவர் சிவன்மலை தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் ரோட்டரி ஆனந்தம் சங்கத்தின் தலைவர் ஏ.பி. அருண் பழனிசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநர் எம்.டி. டாக்டர் சுந்தர்ராஜன், சென்னை சிப்காட் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே சிறப்புறையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அதன்படி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை ,மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, சலவை தொழிலாளிகளுக்கு சலவை பெட்டிகள் என ரூ.2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நலத்திட்ட உதவிகள் ஆனந்தம் ரோட்டரி சங்க தலைவர் அருண் பழனிச்சாமியின் தந்தை கே. பழனிச்சாமி கவுண்டர் நினைவாக தொடர்ந்து 15-வது ஆண்டாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி , ஆனந்தம் ரோட்டரி செயலாளர் கௌரிசங்கர், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பலவேசம், பயிற்சியாளர் பாலசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாவட்ட உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×