search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் சாருஸ்ரீ

    கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
    • வருகிற 10-ந் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நுழைவு தேர்வில் பெற்ற தகுதியுடன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைபேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ Mfpa ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×