என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sanjay Raut"
- மகாராஷ்டிரா முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
- சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம் என தெரிவித்தார்.
சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.
முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple
பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், அவரது இறப்பு தினம் குறித்து சிவசேனா தற்போது சந்தேகம் கிளப்பி இருக்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், இது தொடர்பாக அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, ‘வாஜ்பாய் ஆகஸ்டு 16-ந் தேதி இறந்தார். ஆனால் 12 மற்றும் 13-ந் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16-ந் தேதி இந்த உலகை விட்டு சென்றுள்ளார் அல்லது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதன் மூலம் வாஜ்பாயின் மரண தினம் குறித்து மறைமுகமாக சிவசேனா சந்தேகம் கிளப்பி இருக்கிறது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவே வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SanjaiRaut #AtalBihariVajpayee
கர்நாடக மாநிலம், மங்களூருவில் 3-6-1930 அன்று பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், பள்ளி இறுதியாண்டு கல்விக்கு பின்னர் 1946-ல் பெங்களூருக்கு சென்று கிறிஸ்தவ தேவாலய பாதிரியாருக்கான பயிற்சி கல்லூரியில் இணைந்தார். அங்கு நிலவிய வேற்றுமைகளை பார்த்து அதிருப்தி அடைந்த அவர், 1949-ம் ஆண்டு வேலைதேடி மும்பை நகருக்கு சென்றார்.
ரெயில்வே துறையில் பணியாற்றியபடி, 1950-1960-ம் ஆண்டுகளுக்கு இடையில் அங்கு சோசலிச தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்கள் நலன்கருதி பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி பிரபலமான தொழிற்சங்க தலைவர் என்னும் தகுதிக்கு உயர்ந்தார்.
1967-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு அசைக்கவே முடியாத சக்தி என அறியப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். பின்னர், அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவிக்காலத்தில் 1974-ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமான போராட்டமாக இன்றளவும் கருதப்படுகிறது.
1975-ம் ஆண்டு அந்நாள் பிரதமரால் ‘மிசா’ எனப்படும் நெருக்கடி நிலை சட்டம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் போலீசாரின் நடவடிக்கையில் சிக்காமல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். இடையில், பரோடா வெடிகுண்டு வழக்கில் கடந்த 1976-ம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1994-ம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் சமதா கட்சி என்னும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சியின் சார்பில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டதாக சமதா கட்சி அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். 2007-ம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.
1967 முதல் 2004 வரை நடைபெற்ற 9 பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் தற்போது தீர்மானித்துள்ளார்.
இந்த படத்துக்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையும் சஞ்சய் ரவுத் தயாரித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது. #SanjayRaut #FilmOnGeorgeFernandes #GeorgeFernandes
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க - சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் பா.ஜ.க தலைமை சற்றே நிலைகுலைந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தால் பா.ஜ.க தலைமை மேலும் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. #shivsena #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்