search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Raut"

    • 2024-க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும் என சஞ்சய் ராவத் கூறினார்.
    • சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும் மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் உதவியாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்றம் ஏற்படும். மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

    சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது?

    2024 க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும். இதை நான் மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

    இந்து, முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு, தேர்தல் ஆதாயங்களுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் உண்மையான சக்தியாக இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பா.ஜ.க.வின் இந்துத்துவா போலியானது என தெரிவித்தார்.

    • ஷிண்டே மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
    • சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்தது.

    மும்பை:

    சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த சில நாட்களுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்தது.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தானே முன்னாள் மேயர் மீனாட்சி ஷிண்டே கபுர்பாவ்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் அவதூறு, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.
    • தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது.

    கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    அதே சமயம் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது.

    சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

    • சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார்.
    • சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் பற்றி கடுமையாக பேசினார்.

    வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்காக வேலை பார்த்தவர், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர், காந்தி, நேரு போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க., சிவசேனா கட்சியின் இரு அணிகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக சஞ்சய் ராவத் சாம்னாவில் கூறியுள்ளதாவது:

    நான் 3 மாதங்கள் ஜெயிலில் இருந்தேன். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அதற்கான நினைவிடம் உள்ளது. சாதாரண கைதி, ஒரு நாளை ஜெயிலில் கழிப்பதே கடினம். சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார். அப்போது அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம்.

    ஆங்கிலேய அரசு அவரை பொய் பணப்பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யவில்லை. ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுத புரட்சியை தொடங்கியதால் அவரை கைது செய்து அந்தமான் ஜெயிலில் அடைத்தனர்.

    சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம். அது மன்னிப்பு கடிதம் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் சாவர்க்கரை விமர்சிப்பது அல்ல. சாவர்க்கருக்கு எதிராக பேசியதால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் கிடைத்த நேர்மறை சக்தி, நம்பிக்கையை சிதைத்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது.
    • உண்மை வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை :

    பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டபோது, "கோர்ட்டுக்கு நன்றி" என்று கூறினார்.

    இதையடுத்து அவர் சிவாஜிபார்க்கில் உள்ள பால்தாக்கரே சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது பற்றி கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) செய்தி தொடர்பாளர் சுஷ்மா அந்தரே நிருபர்களிடம் கூறுகையில், "புலி திரும்பி வந்துவிட்டது. சஞ்சய் ராவத் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை கட்சி பயப்பட வேண்டியதில்லை" என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரோஹித் பவார், கூண்டில் இருந்து புலி விடுவிக்கப்பட்ட வீடியோவை டுவீட் செய்து, ராவத்துக்கு டேக் செய்தார். உண்மை வென்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் சகோதரரும், விக்ரோலி எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறுகையில், "மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது. சட்டசபையில் காவிக்கொடி ஏற்றப்படுவதை காண அவர் மீண்டும் கட்சிக்காக பணியாற்ற தொடங்குவார். உண்மை வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

    • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

    அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான பிரவின் ராவத் பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சஞ்சய் ராவ்த்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்டம்பர் 5 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • ஜூலை 1-ம் தேதி சஞ்சய் ராவத் ஏற்கனவே அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், நில மோசடி வழக்கின் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    • நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார்.
    • அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    • மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில எம்.பி.யும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    நில மோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது.

    இச்சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • மகாராஷ்டிராவில் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுஹாத்தியில் உள்ளனர்.
    • முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு நேற்று இரவு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லம் சென்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.

    இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் குஜராத்தின் சூரத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் அசாமின் கவுஹாத்திக்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் எனக் கூறியதுடன் அரசு இல்லத்தை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்துக்குச் சென்றார்.

    இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உத்தவ் தாக்கரே விரைவில் வர்ஷா இல்லத்திற்கு வருவார். கவுஹாத்தியில் உள்ள 21 எம்எல்ஏ.க்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் மும்பை திரும்பியதும் எங்களுடன் இருப்பார்கள். அவர்கள் கவுஹாத்தியில் இருந்து தொடர்பு கொள்ளாமல் மீண்டும் மும்பைக்கு வந்து முதல் மந்திரியிடம் விவாதிக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
    • சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம் என தெரிவித்தார்.

    ×